நற்பட்டிமுனை 02 பிரிவில் காட்டு யானையினால் பப்பாசி தோட்டம்,மதில் சுவர்கள்,வாழைமரங்கள் சேதம்…

13/11/2020 இன்று நற்பட்டிமுனை 02 பிரிவில் காட்டு யானை ஒன்று நள்ளிரவு 11 மணியளவில் வயல் வீதி வழியாக வந்து வேலியை உடைத்து தனிநபர் ஒருவரின் பப்பாசி தோட்டத்தில் புகுந்து பப்பாசி தோட்டத்தில் மரக்கன்றுகளை சேதப்படுத்தி மீண்டும் அயலவர்கள் மதில் சுவர்களை உடைத்து வாழை மரங்களை முறித்து பயிர்களையும் சேதப்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர் மழை காலங்களில் வயல்களில் வெள்ளம் வந்தாலும் யானைகளின் அட்டகாசம் முடியவில்லை.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.