128 பேர் நாடு திரும்பினர்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 128 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
அதன்படி சீனா மற்றும் மத்திய கிழக்கிலிருந்து இலங்கை தூதரக அதிகாரிகள் உட்பட மொத்தம் 128 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
அதன்படி சீனாவின் ஷாங்காயிலிருந்து ஐந்து இலங்கையர்களும் டுபாயிலிருந்து 59 இலங்கையர்களும் நேற்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அத்துடன் கட்டார், தோஹாவிலிருந்து 39 இலங்கையர்களும் டுபாயிலிருந்து 25 இலங்கையர்களும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதேவேளை இலங்கை தூதரக அதிகாரிகளும் டுபாயிலிருந்தும் கட்டாரிலிருந்தும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை