சேவையை முன்னெடுக்க அனுமதி !

கொரோனா வைரஸ் பரவலையடுத்து முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, முடக்க நிலையில் உள்ள மருதானை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு ஆகிய பகுதிகளில், நாளை(16) அதிகாலை 5.00 மணி தொடக்கம், அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி பகுதிகளில் உள்ள இலங்கை முதலீட்டுச் சபை மற்றும் அபிவிருத்தி சபை தொழிற்சாலைகள்,  ,நீதிமன்ற செயற்பாடுகள் ஆகியவற்றை சுகாதார ஆலோசனைகளுடன் முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.