கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக, அருளாசி வேண்டி அம்பாறை மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட வழிபாடு…
கொவிட்-19 தொற்றிலிருந்து நாடும் நாட்டு மக்களும் விடுபட வேண்டி பிரதமரின் வழிகாட்டலின் கீழ் நாடளாவிய ரீதியில் இந்து ஆலயங்களில் விசேட வழிபாடு! இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால், இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக, அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
விசேடமாக ஆலயங்களில் மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் விசேட பிரார்த்தனை வழிபாடுகளைச் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் வழிகாட்டலில் இன்று அம்பாறை மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் (18.11.2020) அதிகாலை 5.45 மணியளவில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.பண்டாரநாயக்கா தலைமையில் இடம்பெற்றது.
கிரிகைகள் யாவும் ஆலய பிரதம குரு க.கு சிவஸ்ரீ நகுலேஸ்வர சர்மா தலைமையிலும் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன், அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஆர்.எம்.டி.ஜே.ரத்நாயக்க, அம்பாறை மாவட்ட 24ம் படைப்பிரிவு இராணுவ அதிகாரி, அம்பாறை மாவட்ட (சுப்பிரிண்டன் பொலிஸ்) பிரியதர்சன கேரத், அம்பாறை மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி லசந்த டடல்லகே,அம்பாறை மாவட்ட செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜ் , ,ஆலய நிர்வாக உறுப்பினர்கள் என மற்றும் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை