மீனவரொருவர் கடலில் விழுந்து மரணம்

காலி  பிரதேசத்திலிருந்து டெங்கி போட்டில்  ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் திருகோணமலை கோட்பே பகுதிக்கு வருகை தந்திருந்த போது மீனவர் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (18) இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை கொட்பே பகுதியில் போட்டை நிறுத்திவிட்டு சிலர் மது அருந்திக் கொண்டிருந்த வேளை இவர் கடலுக்குள் வீழ்ந்துள்ளதாகவும்  தெரியவந்துள்ளது.
குறித்த மீனவர் டிக்வெல்ல-நில் வெல்ல ,மஹருப்பவத்த பகுதியைச் சேர்ந்த நுவன் பிரசன்ன விதாரண (38வயது) எனவும் தெரியவருகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மரணம் தொடர்பில் திருகோணமலை துறைமுக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(பதுர்தீன் சியானா)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.