பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு ஆசி வேண்டி விசேட வழிபாடு…

இந்து கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் திரு அ. உமாமகேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டலில் மேலதிக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் தலைமையில் 18/11/2020 ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவின் ஒரு வருட கால பதவி நிறைவு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் 75 ஆவது பிறந்த தினம் ஆகியவற்றை முன்னிட்டு வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட வழிபாடு இடம்பெற்றது.இவ் நிகழ்வில் கெளரவ பிரதம மந்திரியின் மட்டு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் கலந்துகொண்டார்.

அவனைத்தொடர்ந்து சீர்பாத தேவி சிறுவர் இல்லத்தில் மங்களவிளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது பிரதம அதிதியாக வருகை தந்த கெளரவ பிரதம மந்திரியின் மட்டு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்கள்  இந்நிகழ்வில் மங்களவிளக்கேற்றினார். அதனைத்தொடர்ந்து வருகைதந்த மேலதிக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் மற்றும் பிரதேசசெயலாளர்கள் மங்களவிளக்கேற்றிவைத்தனர்.

மேலும் வருகைதந்த மேலதிக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்,பிரதேசசெயலாளர்களுக்கு பிரதம அதிதியினால் நீதிநூல்கள் வழங்கிவைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து சீர்பாத தேவி சிறுவர் இல்ல மாணவர்களுக்கு புத்தகப்பை மேலும் இந்து கலாசார திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட கொப்பிகளும் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் வருகைதந்த அதிதி ,மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்களினால் வீரமுனை சீர்பாத தேவி சிறுவர் இல்லத்தில் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டது.மேலும் இந்து கலாசார உத்தியோகத்தர்கள் ,அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.