பாடசாலைகள் மீண்டும் திறக்கும் திகதி வெளியானது .

கொரோனா வைரஸ் காரணமாக மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்படட பகுதிகளைத் தவிர அனைத்து பாடசாலைகளும் அடுத்த வாரம் முதல் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க அனுமதிக்கப்பட்ட பாடசாலைகள் நவம்பர் 23 திங்கள் முதல் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

முதற் கட் டமாக(23)திங்கள்கிழமை முதல் 06 – 13 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புக்கள் மீண்டும் ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.