கொரோனா மூன்றாவது அலை பாதிப்பு 15,328 ஆக அதிகரிப்பு! – 60 பேர் உயிரிழப்பு…

இலங்கையில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை மூலம் நேற்றிரவு வரை 15 ஆயிரத்து 328 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 60 பேர் பலியாகியுள்ளனர்.

மினுவாங்கொட கொத்தணி மூலம்  ஆயிரத்து 59 பேருக்கும், பேலியகொட கொத்தணிமூலம் 12 ஆயிரத்து 269 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இவ்வாறு மூன்றாவது அலை மூலம் கொரோனா தொற்றியவர்களில் நேற்று வரை 9 ஆயிரத்து 478 பேர் குணமடைந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் நேற்றிரவு வரை மொத்தமாக 18 ஆயிரத்து 841 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 12 ஆயிரத்து 903 பேர் குணமடைந்துள்ளனர். 5 ஆயிரத்து 865 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 73 பேர் உயிரிழந்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.