மாவீரர் தினம் அனுஸ்டிக்க மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பிற்கு நீதிமன்றம் தடையுத்தரவு…

மாவீரர் தின நிகழ்வுகள் வடக்கு கிழக்கு பகுதிகளில் அனுஸ்டிப்பதற்குத் தயாராகி வருகின்ற நிலையில் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வோருக்கெதிராக நீதிமன்றத் தடையுத்தரவுகள் பெறப்படும் செயற்பாடுகளும் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த அடிப்படையில் மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் மாவீரர் தினம் அனுஸ்டிப்பதற்கு ஏறாவூர் பொலிசாரினால் நீதிமன்றத் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

ஏறாவூர் பொலிசாரினால் மேற்படி தடையுத்தரவு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் அவர்களிடம் இன்றைய தினம் வழங்கப்பட்டது. தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் உட்பட அவர் சார்ந்தவர்கள், அமைப்பின் பிரதிநிதிகள் எவரும் மாவீரர் தினத்தை மட்டக்களப்பில் அனுஸ்டிப்பதற்கு முடியாத வகையில் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.