ரிஸாட் பதியூதீன் பிணையில் விடுதலை!
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் பதியூதீன் பிணையில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவான் பிரியந்த லியனகே முன்பாக இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ஒரு இலட்சம் ரூபா ரொக்கம் மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் செல்ல நீதவான் அனுமதியளித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலப் பகுதியில் இடம்பெயர்ந்தோரை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களின் ஊடாக வாக்களிக்க அழைத்து சென்றதன் ஊடாக, அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் ரிசாட் பதியூதீன் கடந்த மாதம் 19ஆம் திகதி தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .
கருத்துக்களேதுமில்லை