அக்கரைப்பற்று பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனோ தொற்று !

அம்பாறை ,அக்கரைப்பற்று பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனோ தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது

குறித்த பிரதேசத்திலுள்ள மீன் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்ட 20 பேருக்கு நேற்று புதன்கிழமை (25) எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பிரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்களை உடனடியாக கொரோனா தொற்றுக்காக சிகிச்யைளிக்கப்படும் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதுடன் , அக்கரைப்பற்று பகுதியில் இன்று காலை  (26) சுகாதார பிரிவினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதை அவதானிக்க முடிந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.