பொகவந்தலாவ பகுதியில் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – அப்பிரதேச மாணவர்கள் ஆசிரியர்கள் பாடசாலைக்கு வர வேண்டாம் எனவும் வேண்டு கோள்.
(க.கிஷாந்தன்)
பொகவந்தலாவ சுகாதா வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள் கொட்டியாகலை கீழ்பிரிவு, டிக்கோயா டில்லரி தோட்டம், நோர்வூட் வெஞ்சர் தோட்டம், பொகவந்தலாவ செல்வகந்தை தோட்டம், பொகவந்தலாவ பொகவான தோட்டம், பொகவந்தலாவ மோர ஆகிய தோட்டங்களை சேர்ந்த 52,32,21,26 வயதுடையவர்கள் என்றும் இவர்கள் கொரோனா சிகிச்சை முகாம்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சுகாதார பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
தொற்றுக்குள்ளான மேற்படி ஆறு பேரும் கொழும்பு புறக்கோட்டை, புளுமென்டல், பம்பலப்பிட்டி போன்ற பகுதிகளிலிருந்து கடந்த 17ம் திகதி தமது வீடுகளுக்கு வருகை தந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து பொகவந்தலாவ பகுதிக்கு வருகை தந்தவர்களிடம் கடந்த 24 ம் திகதி எழுமாறாக தெரிவு செய்யப்பட்ட 46 பேரிடம் மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை நேற்று (26) திகதி வெளியானதனை தொடர்ந்து இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எனவே குறித்த பகுதியிலுள்ள மாணவர்கள் ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டாம் என அட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களிடம் நெருக்கமான உறவு வைத்திருந்த குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதே வேளை பொகவந்தலாவையில் உள்ள பாசாலைகளில் மிகவும் குறைந்தளவு மாணவர்களே வருகை தந்துள்ளதாகவும் ஒரு பாடசாலை மாணவர்களை வீட்டுக்கு திருப்பி அனுப்பப்ட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துக்களேதுமில்லை