காங்கேசன்துறை கடலில் குளிக்கச் சென்ற இருவர் அலையில் அடித்துச் சென்ற நிலையில் மாயம் !

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை கடலில் குளிக்கச் சென்ற இருவர் அலையில் அடித்துச் சென்ற நிலையில் காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச் சம்பவம் காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமையில் இன்று (29) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றது.

தையிட்டியைச் சேர்ந்த 19 வயதான இருவரே இவ்வாறு கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமற் போயுள்ளனர். அவர்களில் ஒருவர் குடும்பத் தலைவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இருவரையும் தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை
காங்கேசன்துறை பொலிஸார்  மேற்கொண் டு வருகின்றனர் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.