யாழ்ப்பாணத்தின் பல இடங்களையும் சேர்ந்த 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

யாழ்ப்பாணத்தின் பல இடங்களையும் சேர்ந்த 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 393 பேருக்கு Covid-19 இன்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில்உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 104 பேரும் இதில் அடங்குவர். இந்த பரிசோதனையில் யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் இருந்து 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது.. கொக்குவில் 1 தெல்லிப்பழை 3 அளவெட்டி 2 உரும்பிராய் 1 நவாலி 1 கீரிமலை 2 மானிப்பாய் 2 உடுவில் 2 இனுவில் 2 சங்கானை 1 பண்டத்தரிப்பு 1 சுன்னாகம் 2 கைதடி 1 ஏழாலை 3 காங்கேசன்துறை 1 சன்டிலிப்பாய் 1

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.