காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி ஆலயத்தில் தொற்றிருந்து மக்களையும், நாட்டையும் பாதுகாக்குமாறு கோரி பிரார்த்தனை வழிபாடு…

மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம்

காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி ஆலயத்தில் தொற்றிருந்து மக்களையும், நாட்டையும் பாதுகாக்குமாறு கோரி பிரார்த்தனை வழிபாடு செவ்வாய்க்கிழமை இன்று இடம்பெற்ற போது 29.12.2020

பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

விசேடமாக ஆலயங்களில் மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் பிரார்த்தனை வழிபாடுகளைச் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி ஆலயபரிபாலனசபையின் ஒத்துழைப்புடன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மகேஸ்வரக்குருக்கள் கிரியா குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் தலமையில் அதிகாலை 05.30 மணிக்கு இடம்பெற்றது.

இந்நிகழ்வானது காரைதீவு பிரதேச செயலாளர் திரு எஸ். ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்றதுடன் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வே.ஜெகதீசன், விசேட அதிதியாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கௌரவ திரு கே.ஜெயசிறில.காரைதீவு வைத்தியசாலையில் வைத்திய அதிகாரி திரு என். அருந்திரன், ஏனைய ஆலயங்களின் தர்மகர்தாதாக்கள்,கலாச்சார உத்தியோகத்தர்களர், நிர்வாகத்தினர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.