வாய்வெடி உட்கொண்டதில் யானை படுகாயம்!

(பதுர்தீன் சியானா)

திருகோணமலை சூரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெயந்திபுர  பகுதியில் யானை குட்டியொன்று வாய்வெடி உட்கொண்டு படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று (09)  இடம்பெற்றுள்ளது.
சூரியபுர  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெயந்திபுர அப்பகுதியில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து வந்த நிலையில் 8 மாத யானைக்குட்டியொன்று  காயப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட யானை வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் யானை குட்டியை சிகிச்சைக்காக கிரிதல பகுதிக்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை மிருகங்களை வேட்டையாடும் நபர்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி மிருக வேட்டை யில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் யானைகள் அதிக அளவில் உயிரிழப்பதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
குறிப்பாக சட்டவிரோதமாக காட்டுப்பகுதிக்குள் சென்று வேட்டையாடும் நபர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.