திருக்கோவில் பிரதேசத்தில் பட்டதாரி நியமனங்கள் வழங்கி வைப்பு !

(எஸ்.கார்த்திகேசு)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்ளைத் திட்டத்தின் ஊடாக அரசால் வழங்கப்பட்டு வரும் பட்டதாரி பயிலூனர்களுக்கான இரண்டாம் கட்ட அரச நியமனங்கள், திருக்கோவில் பிரதேசத்தில் இன்று (31) வழங்கப்பட்டன.

திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் முதற்கட்ட நியமனங்களில் பெற்றுக்கொள்ள தவறிய 09 பட்டதாரிகளுக்கே, பட்டதாரி பயிலூனர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று வழங்கப்பட்டன.

இந்நிகழ்வு, திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் தலைமையில் நடைபெற்றதுடன், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் பிரதம அதிதியாககக கலந்துகொண்டு, பயிலூனர் நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.

உதவிப் பிரதேச செயலாளர் கே.சதீசேகரன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.அனோஜா, சமூர்த்தி தலைமை முகாமையாளர் பி.பரமானந்தம் எனப் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.