யாழில் வீடு புகுந்து குடும்பத் தலைவரை வெட்டிவிட்டு கொள்ளையடித்த மூவர் கைது!

நாள்ளிரவில் வீடு புகுந்து குடும்பத்தலைவரை வாள் மற்றும் கத்தியால் வெட்டி படுகாயப்படுத்திவிட்டு 6 பவுண் தாலிக்கொடியை கொள்ளையிட்ட கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினர் தெரிவித்தனர்.

கோண்டாவில் செபஸ்தியான் வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் (6) நள்ளிரவு 12 மணியளவில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது.

கோப்பாய் வைத்தியசாலையில் கடமையாற்றுபவரின் வீட்டிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதனடிப்படையில் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

தடயங்களின் அடிப்படையில் கோண்டாவிலைச் சேர்ந்த மூவர் இன்று (8) கைது செய்யப்பட்டனர். 40, 30 மற்றும் 23 வயதுடைய சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டனர்.

பிரதான சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் 50 மில்லிக்கிராம் ஹெரோயின், கொள்ளையிடப்பட்ட தாலிக்கொடியுடன், வாள் மற்றும் கத்தி என்பன கைப்பற்றப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.