மட்டக்களப்பு ஊறணி சந்தியில் பக்கோ இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு கொழும்பு வீதி ஊறணி சந்தியில் பக்கோ இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் இன்று புதன்கிழமை 17) காலையில் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிலை செலுத்தி வந்தவர் உயிரிழந்ததுடன் அதில் பின்னால் இருந்துவந்த பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக போக்குவரத்து பொலிசார்   தெரிவித்தனர்.

அம்பாறை கல்முனைக்குடி 9 ம் பிரிவு வீட்டுத்திட்ட வீதியைச் சேர்ந்த 63 வயதுடைய இராசதம்பி முகமட் பசில் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த போது ஊறணியில் இருந்து திருப்பெரும்துறையை நோக்கி பிரயாணித்த பக்கோ இயந்திரமும் ஊறணி சந்தியை குறுக்கறுக்கும் போது மோட்டர்சைக்கிளும் பக்கோ இயந்திரமும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கில் செலுத்தியவரும் அதில் பின்னிருந்த பெண் ஒருவர் உட்பட இருவர் பகாயமடைந்துனர்.

இதனையடுத்து படுகாயமடைந்தவர்களை மட்டு போதனவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்னர் இதில் படுகாயமடைந்த 63 வயதுடைய முகமட் பசீல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பில் பக்கோ இயந்திரத்தை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.