திருகோணமலையில் மூன்று இடங்களில் நான்கு பவுன் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற நபர் ஒருவர் விளக்கமறியலில்

(எப்.முபாரக் )
திருகோணமலையில் மூன்று இடங்களில் நான்கு பவுன் தங்கச் சங்கீலியை அறுத்துச் சென்ற நபர் ஒருவரை இம்மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று(18) உத்தரவிட்டார்.
கூம்புகார் வீதி,பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் திருகோணமலை நகரம் ,திருகோணமலை மூன்றாம் கட்டை மற்றும் பாலையூற்று போன்ற மூன்று இடங்களில் நான்கு பவுன் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளதாகவும் அப்பகுதிகளில் பொறுத்தப்பட்டுள்ள சீசீடிவீ கானொலிகளை கொண்டு சந்தேக நபரை  கைது செய்ததாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீதியால் அல்லது கடைக்கு தனியாக  செல்லுகின்ற வயதான பெண்களின் தங்கச் சங்கியை இவ்வாறு  அறுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.