மட்டக்களப்பு-அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற மாசிமக உற்சவம்!

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் மாசிமக உற்சவம் இன்று (சனிக்கிழமை) சிறப்பாக நடைபெற்றது.

இந்துக்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த மாசி மகத்தினை முன்னிட்டு  பெரும்பாலான ஆலயங்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன.

அந்தவகையில் கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் மாசிமக உற்சவம்  சிறப்பாக நடைபெற்றது.

இன்று காலை, ஆலயத்தில் விசேட யாக பூஜை நடைபெற்று, மூலமூர்த்தி மற்றும் அம்பாளுக்கு விசேட அபிஷேகம் நடைபெற்றது.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் இன்றைய மாசி மக பூஜைகள் நடைபெற்றன.

இதன்போது மூலமூர்த்தி மற்றும் வசந்த மண்டபத்தில் விசேட தீபாராதனைகள், பூஜைகள் நடைபெற்று சுவாமி வீதியுலா நடைபெற்றது.

கொரோனா அச்சுறுத்தல் நிலவும் காலம் என்ற காரணத்தினால் பக்தர்கள் வரையறுக்கப்பட்டு, சுகாதார வழிமுறைகளை கடைப்பிடித்து, திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது நாட்டு மக்கள் கொரோனா தொற்றில் இருந்து விடுபடவும் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபட்டு சிறப்புற வாழவும்  விசேட வழிபாடுகள் நடாத்தப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.