ஆடைத்தொழிற்சாலைக்கு சென்ற பேருந்து விபத்து

மன்னாரில் இருந்து ஆடைத்தொழிற்சாலைக்கு யுவதிகளை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று மடு காவல் நிலையம் முன்பு இன்று காலை குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஆடைத்தொழிற்சாலைக்கு பணிக்கு செல்லும் பெண்களை ஏற்றிச்சென்றுகொண்டிருந்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்து மன்னாரில் இருந்து மடுவை நோக்கி சென்றுகொண்டிருக்கும் போது மடுரோட் காவல் நிலையத்திற்கு முன்பாக நாய் ஒன்று குறுக்கிட சாரதி பேருந்தை வீதியின் அருகே செலுத்த முயற்சித்த போது பள்ளத்திற்குள் குடைசாய்ந்துள்ளது.

குறித்த விபத்தில் அதிஸ்டவசமாக எவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மடு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.