வாகன விற்பனையில் போலி ஆவணங்கள் தயாரிப்பு – நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது

போலி ஆவணங்களை தயாரித்து வாகன விற்பனையில் ஈடுப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருநாகல் பிரதேசத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடத்தி செல்லப்படும் அல்லது திருடப்படும் வாகனங்களின் ஆரம்ப பதிவுக்கான புத்தகங்களை காப்புறுதி நிறுவனங்களில் கொள்வனவு செய்து அதைபோன்று தயாரிக்கப்பட்ட ஆவணங்களுடன் சந்தேக நபர்கள் வாகனங்களை விற்பனை செய்திருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.