முதலை இழுத்துச் சென்ற சிறுவனை தேடும் பணி தீவிரம்

திருகோணமலை- மூதூர், பள்ளிக்குடியிருப்பு பகுதியிலுள்ள குளத்தில் நீராடிக்கொண்டிருந்த  சிறுவனை, (15வயது) முதலை இழுத்துச் சென்றுள்ளது.

இந்நிலையில் குறித்த சிறுவனை தேடும் பணியினை பொலிஸார், கடற்படையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை இவ்வாறான ஆபத்துக்களின்போது, விரைவான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஒழுங்கான பொறிமுறையொன்று மூதூர் கிழக்கில் இல்லாதமையின் காரணமாகவே உயிரிழப்புக்கள் அதிகம் பதிவாகின்றன என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும் பொலிஸாருக்கு தெரியப்படுத்தினாலும் மனித வலு மாத்திரம் பயன்படுத்தக் கூடிய நிலைமையே காணப்படுகின்றது எனவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.