அரசியல் யாப்பில் சைவ சமயத்திற்கு முன்னுரிமை கோரி உணவு தவிர்ப்பு போராட்டம்

புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பில் சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்கக் கோரி இலங்கையின் 11 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது

மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களின் ஏற்பாட்டில் உணவு தவிர்ப்பு முன்னெடுக்கப்படுகின்றது

யாழ்ப்பாணம் சாவகச்சேரி மறவன்புலவில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் சச்சிதானந்தம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.

சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்கப் பட்டால் மத மாற்றிகள் மூலம் சைவ சமயத்திலிருந்து வேறு மதத்திற்கு மக்கள் செல்லமாட்டார்கள்.

இந்து மக்கள் பசுவினை கோமாதா என வணங்குகின்றோம். ஆனால் இங்கே மாடுகளை வெட்டி உண்கிறார்கள் அதனையும் நிறுத்த கோருகின்றோம் .அதாவது பாலைவனங்களில் தான் மாடுகளை அறுத்து உண்பார்கள் ஆனால் இலங்கை ஒரு சோலைவனம் இங்கே மாடுகளை கோமாதாவாக வணங்கி அவைகளைப் பாதுகாக்க வேண்டும் எனவே இலங்கையில் மாடுகள் வெட்டுவதை நிறுத்த வேண்டுமெனவும் கோரி இன்றைய தினம் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுவருகிறார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.