புத்தாக்க அரங்க இயக்கம் நடத்தும் இணையவழி பன்னாட்டு அரங்க கதையாடல்.
புத்தாக்க அரங்க இயக்கம் நடத்தும் இணையவழி பன்னாட்டு அரங்க கதையாடல் 01 நிகழ்வு புரட்டாதி மாதம் 7,8,9,10 ஆம் திகதிகளில் இரவு 7 மணிக்கு புத்தாக்க அரங்க இயக்கத்தின் பணிப்பாளர் எஸ்.ரி.குமரன் தலைமையில் இடம் பெறவுள்ளது.
இந் நிகழ்வில் 7.9.2021 செவ்வாய்க்கிழமை பேராசிரியர் சி.மௌனகுரு (இலங்கை) நாடகமும் ஆற்றுகையும், 8.9.2021 புதன்கிழமை தஞ்சாவூர் உதிரிநாடகநிலம் நாடகச் செயற்பாட்டாளர் விஜயகுமார் (தமிழ்நாடு இந்தியா) கல்விநிலையில் நவீனநாடகத்தின் பங்கு , 9.9.2021 வியாழக்கிழமை அவைக்காற்றுக் கலைக்கழகம் க.பாலேந்திரா ஆணந்தராணி பாலேந்திரா (லண்டன்) கண்ணாடி வார்ப்புக்கள் நாடக அனுபவம் ,10.9.2021 வெள்ளிக்கிழமை பேராசிரியர் பால – சுகுமார் (லண்டன்) ஈழநாட்டியம் ஆகிய விடயங்களில் கதையாடவுள்ளார் .
ஏற்புரையினை புத்தாக்க அரங்க இயக்கத்தின் நிர்வாகப் பணிப்பாளர் எஸ்.ரி.அருள்குமரன் வழங்கவுள்ளார்கள்.
இவ் இணையவழி அரங்க கதையாடல் நிகழ்வில் ஆர்வமுடையவர்களை சூம் செயலி இலக்கம் 647334 8261கடவுச் சொல் ITM ஊடாக இணைந்து கொள்ளுமாறு புத்தாக்க அரங்க இயக்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை