புத்தாக்க அரங்க இயக்கம் நடத்தும் இணையவழி பன்னாட்டு அரங்க கதையாடல்…
புத்தாக்க அரங்க இயக்கம் நடத்தும் இணையவழி பன்னாட்டு அரங்க கதையாடல் 02 நிகழ்வு புரட்டாதி மாதம் 20,21,22,23 ஆகிய திகதிகளில் இரவு 7 மணிக்கு புத்தாக்க அரங்க இயக்கத்தின் பணிப்பாளர் எஸ்.ரி.குமரன் தலைமையில் இடம் பெறவுள்ளது.
இந் நிகழ்வில் 20.9.2021 திங்கட்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மெய்யியல்துறை முன்னாள் விரிவுரையாளர் க.ஆதவன்(டென்மார்க் ) புலம்பெயர் நாடகப் பயணங்கள் , 21.9.2021 செவ்வாய்க்கிழமை உதவிப்பேராசிரியர் முனைவர் கி.பார்த்திபராஜா(தமிழ்நாடு ,இந்தியா) தமிழகத்திலிருந்து ஈழத்துக்கு- இசைநாடக உறவும் தொடர்ச்சியும் , 22.9.2021 புதன்கிழமை முனைவர் ஆ.அழகுசெல்வம்(அழகுபாரதி) (தமிழ்நாடு, இந்தியா ) மக்களுக்கான மக்கள் நாடகம் , 23.9.2021 வியாழக்கிழமை பேராசிரியர் அ. இராமசாமி (தமிழ்நாடு, இந்தியா) நாடகப்பனுவல்கள் மேற்கும் கிழக்கும் ஆகிய விடயங்களில் கதையாடவுள்ளார் .
ஏற்புரையினை புத்தாக்க அரங்க இயக்கத்தின் நிர்வாகப் பணிப்பாளர் எஸ்.ரி.அருள்குமரன் வழங்கவுள்ளார்கள்.
இவ் இணையவழி அரங்க கதையாடல் நிகழ்வில் ஆர்வமுடையவர்களை சூம் செயலி இலக்கம் 647334 8261கடவுச் சொல் ITM ஊடாக இணைந்து கொள்ளுமாறு புத்தாக்க அரங்க இயக்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை