புத்தாக்க அரங்க இயக்கம் நடத்தும் இணையவழி பன்னாட்டு அரங்க கதையாடல்…

புத்தாக்க அரங்க இயக்கம்  நடத்தும்  இணையவழி பன்னாட்டு  அரங்க கதையாடல் 02 நிகழ்வு   புரட்டாதி மாதம் 20,21,22,23 ஆகிய திகதிகளில் இரவு 7 மணிக்கு புத்தாக்க அரங்க இயக்கத்தின்  பணிப்பாளர் எஸ்.ரி.குமரன் தலைமையில் இடம் பெறவுள்ளது.
இந் நிகழ்வில் 20.9.2021 திங்கட்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மெய்யியல்துறை முன்னாள் விரிவுரையாளர் க.ஆதவன்(டென்மார்க் ) புலம்பெயர் நாடகப் பயணங்கள் ,  21.9.2021 செவ்வாய்க்கிழமை உதவிப்பேராசிரியர் முனைவர்  கி.பார்த்திபராஜா(தமிழ்நாடு ,இந்தியா) தமிழகத்திலிருந்து ஈழத்துக்கு- இசைநாடக உறவும் தொடர்ச்சியும் ,   22.9.2021 புதன்கிழமை முனைவர் ஆ.அழகுசெல்வம்(அழகுபாரதி) (தமிழ்நாடு, இந்தியா ) மக்களுக்கான மக்கள் நாடகம்  , 23.9.2021 வியாழக்கிழமை பேராசிரியர் அ. இராமசாமி (தமிழ்நாடு, இந்தியா) நாடகப்பனுவல்கள் மேற்கும் கிழக்கும்  ஆகிய விடயங்களில் கதையாடவுள்ளார் .
ஏற்புரையினை புத்தாக்க அரங்க இயக்கத்தின்  நிர்வாகப் பணிப்பாளர் எஸ்.ரி.அருள்குமரன் வழங்கவுள்ளார்கள்.
இவ் இணையவழி அரங்க கதையாடல்  நிகழ்வில் ஆர்வமுடையவர்களை சூம் செயலி இலக்கம் 647334 8261கடவுச் சொல் ITM ஊடாக இணைந்து கொள்ளுமாறு புத்தாக்க அரங்க இயக்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.