திருகோணமலை மாவட்ட கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டமும் அடையாள அட்டை மற்றும் மேலங்கி வழங்கும் நிகழ்வு.

திருகோணமலை மாவட்ட கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டமும் அடையாள அட்டை மற்றும் மேலங்கி வழங்கும் நிகழ்வு கந்தளாய் நகர மண்டபத்தில் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் தலைமையில் இன்றைய தினம்(4) நடைபெற்றது.
கங்கத்தலாவ ஊடகவியலாளர் ஒன்றியத்தின் மேம்பாட்டிற்காகவும் வளர்ச்சிக்காகவும் நிர்வாக கூட்டங்களில் பேசப்பட்ட விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டன.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர் விட்ட தவறுகளை எமது சங்கம் விடக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது.
இதன் போது ஊடகவியலாளர்களுக்கு உத்தியோகபூர்வ டிசேட்டும்,அடையாள அட்டையும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கந்தளாய் பிரதேச சபையின் தவிசாளர் சமன் ஏக்கநாயக்க,திருகோணமலை மாவட்ட செயலகத்தின் தகவல் உத்தியோகத்தர் திரு.ரசினும் கலந்து கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.