கிளிநொச்சி இந்துக்கல்லூரியின் நுழைவாயிலுக்கான அடிக்கல் சிறீதரன் எம்.பி யினால் நாட்டிவைப்பு!

கிளிநொச்சி இந்துக்கல்லூரியின் நுழைவாயிலுக்கான அடிக்கல்லினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்று நாட்டி வைத்தார்.

இந்நுழைவாயில் நாடாளுமன்ற உறுப்பினரும் இப் பாடசாலையின் பழைய மாணவனுமான சிவஞானம் சிறீதரன் அவர்களின் 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமையப்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வு பாடசாலையின் முதல்வர் திருமதி மீனலோஜினி இருதயதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியரும் பழைய மாணவனுமான வைத்திய கலாநிதி மனோகரன் பொறியாளர் கோபி பழைய மாணவர்கள் சங்கத்தின் செயலாளர் கீர்த்தன் 1995 ம் ஆண்டு க.பொ.த.சாதாரணதரம் பயின்ற பழைய மாணவர்கள் பாடசாலையின் பழைய மாணவர்கள் அதிபர்களான கணேசமூர்த்தி, உமாசங்கர் ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் திருமதி செல்வராணி எனப் பலரும் கலந்து கொண்டனர். பின்னர் பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கத்தினருடனும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினருடனான சந்திப்பும் இடம்பெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.