காரைதீவு பிரதேச கலைமன்றங்களின் கலைவிழா நிகழ்வு !

காரைதீவு பிரதேச கலைமன்றங்களின் கலைவிழா நிகழ்வு காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே ஜெகதீசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் டீ .எம். றிம்சான், சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் எம்.எம். அச்சிமுகமட், பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் எம். சதாகரன் மற்றும் எம். மனோகரன் கலாசாரபிரிவு பிரதம முகமைத்துவ உத்தியோகத்தர், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான வீ.விக்கினேஸ்வரன், சிவலோஜினி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது கலைமன்றங்களின் அறிமுகவிழாவும், கலாசார பாரம்பரிய நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் நிகழ்வில் கலந்து கொண்ட கலைஞர்களுக்கு இதன்போது சான்றிதழ்கள் கேடயங்களும் வழங்கி
பாராட்டப்பட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.