சலுகைகளை வழங்கி சமாளிக்கவே முடியாது – தமிழர் உரிமைகளே வேண்டும் என்கிறார் சம்பந்தன்

"சலுகைகளை வழங்கி சம்பந்தனைச் சமாளிக்கலாம் என்று மஹிந்த ராஜபக்சவோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவோ நினைக்கக்கூடாது. சலுகைகளை வழங்கி சம்பந்தனை ஒருபோதும் சமாளிக்கவே முடியாது." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு ...

மேலும்..

கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2728 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 03 பேர் சவூதி அரேபியாவில் இருந்து ...

மேலும்..

கொரோனாவை கட்டுப்படுத்தும் அதேவேளை நாடும் அபிவிருத்தி செய்யப்படுகின்றது – நாமல்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவரும் அதேவேளையில், நாட்டின் வளர்ச்சி நடவடிக்கைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நாமல் ராஜபக்ஷ, கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைகள் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் மந்தமடைந்தது எனக் ...

மேலும்..

இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்தமையால்தான் இனவாதியாக பார்க்கப்பட்டேன்- விஜயதாச

கடந்த அரசாங்கத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்தமையால், இனவாதியாக பார்க்கப்பட்டேன் என முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் விஜயதாச ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “இஸ்லாமிய அடிப்படைவாதம் ...

மேலும்..

கொழும்பிலுள்ள நடுத்தர குடும்பங்களுக்கு விசேட வீட்டுத்திட்டம்- மனோ கணேசன்

கொழும்பில் வாடகை வீடுகளில் வாழும் நடுத்தர மட்ட வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு சொந்த  வீடுகளை வழங்கும் விசேட வீட்டுத்திட்டம், சஜித் ஆட்சியில் முன்னெடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ...

மேலும்..

சிறைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பாக ஆராய குழு

சிறைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பாக ஆராய்வதற்காக 7 பேர் கொண்ட குழுவொன்றினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ தலைமையிலான குறித்த குழுவில், சட்ட விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹணதீர, மேனக அரங்கன, ...

மேலும்..

மயிலிட்டி மீன்பிடி இறங்கு துறைக்கு எரிபொருளினை வழங்குவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து!

மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தினை பயன்படுத்தும் மீன்பிடிக் கலங்ளுக்கு எரிபொருள் வழங்குவதற்கான உடன்படிக்கை இன்று  (திங்கட்கிழமை) கைச்சாத்திடப்பட்டது. கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்துக்கும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கும் இடையே இந்த உடன்படிக்கை ...

மேலும்..

குருநாகலில் அரசவை தகர்க்கப்பட்ட விவகாரம் – விசாரணைக் குழுவின் அறிக்கையை பிரதமரிடம் வழங்க நடவடிக்கை

வரலாற்று சிறப்புமிக்க குருநாகல் புவனேகபாகு மன்னரின் அரசவை தகர்க்கப்பட்டமை தொடர்பான விசாரணைக்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கப்படவுள்ளது. அதற்கமைய குறித்த அறிக்கை எதிர்வரும் 23ஆம் திகதி பிரதமரிடம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திசாநாயக்க ...

மேலும்..

ஐக்கிய தேசியக் கட்சி கடந்தகாலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள தயாராக உள்ளது – ரவி

ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத்திற்கு மட்டுமல்ல, கட்சிக்கும் ஒரு முக்கியமான ஒரு தருணத்திலேயே நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது என அக்கட்சியின் துணைத் தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய தேசியக் கட்சி ...

மேலும்..

முன்னாள் அமைச்சர்களான ராஜித, சம்பிக்கவிற்கு அழைப்பாணை

முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி எதிர்வரும் 28ஆம் திகதி அரசியல் பழிவாங்கல் தொடர்பாக் விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு குறித்த தினத்தில் முன்னிலையாகுமாறு மற்றும் குற்றத் தடுப்புப் பிரிவின் ...

மேலும்..

ஐக்கிய மக்கள் சக்தியானது வாடகைக்கு வாங்கப்பட்ட கட்சி – நவீன் திஸாநாயக்க

ஐக்கிய மக்கள் சக்தியானது வாடகைக்கு வாங்கப்பட்ட கட்சியாகும். அந்த   கட்சிக்கு கொள்கைகள் கிடையாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். கொத்மலை நவதிஸ்பன பகுதியில்  இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ...

மேலும்..

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் – ஜனாதிபதி எச்சரிக்கை

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஆகியோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரத்தினபுரி பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “தற்போது ...

மேலும்..

ஐக்கிய தேசிய கட்சி ரணில் – சஜித் என பிளவுப்பட்டுள்ளதன் மூலம் தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளது – மஹிந்த

ஐக்கிய தேசிய கட்சி ரணில் – சஜித் என பிளவுப்பட்டுள்ளதன் மூலம் தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்,  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மொனராகலை மெதகம ஆர்.எம். குணசேன மைதானத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு  உரையாற்றும் ...

மேலும்..

கொரோனா அச்சம் – 6 ஆயிரத்து 52 பேர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்

நாடளாவிய ரீதியில்  6 ஆயிரத்து 52 பேர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் 53 தனிமைப்படுத்தல் நிலையங்களில் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்படல் நடைமுறையை முடித்த மேலும் 6 பேர் இன்று (திங்கட்கிழமை) கல்பிட்டி தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வெளியேறியுள்ளனர். இதனையடுத்து, தேசிய செயற்பாட்டு ...

மேலும்..

ரவி மற்றும் ரிஷாட் மீதான விசாரணையை ஒத்திவைக்க தேர்தல்கள் ஆணைக்குழு சி.ஐ.டி.யிடம் கோரிக்கை

முன்னாள் அமைச்சர்கள் ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் மீதான விசாரணையை தேர்தல் நிறைவடையும் வரை ஒத்திவைக்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தேர்தலின்போது விசாரணைகள் தொடங்கப்படுகின்றன, அதற்கான காரணங்கள் குறித்து சந்தேகம் உள்ளது எனவே ...

மேலும்..