தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர்களுக்கிடையில் கலந்துரையாடல்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ். மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கலந்துரையாடல் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை மாட்டீன் வீதியில் உள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியில் 7 வேட்பாளர்கள், புளொட் அமைப்பில் இருவர் மற்றும் ரேலோவில் ...

மேலும்..

பெரஹர நிகழ்வுகள் குறித்து ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு!

இம்முறை பெரஹர நிகழ்வுகளை பிரதான வணக்கஸ்தலங்கள் மற்றும் தேவாலயங்களில்  முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அறிவிறுத்தல் வழங்கியுள்ளார். இருப்பினும் குறித்த பெரஹர நிகழ்வுகளை பார்வையிட மக்களுக்கு அனுமதி இல்லை என இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “எமது பாரம்பரியம் மற்றும் மத கோட்பாடுகளுக்கு ...

மேலும்..

மத அடிப்படையில் சிறுபான்மையின மக்கள் மீது திட்டமிட்ட பாகுபாடு- இலங்கை குறித்து அமெரிக்கா அறிக்கை

மத அடிப்படையில் சிறுபான்மையின மக்கள் மீது இலங்கை அரசாங்கத்தினால் திட்டமிட்ட பாகுபாடு  தொடர்ச்சியாக காண்பிக்கப்பட்டு வருவதாக சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அறிக்கையில் அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஐக்கிய அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவினால் வெளியிட்டுவைக்கப்பட்ட 2019ஆம் ஆண்டிற்கான சர்வதேச மதச் சுதந்திரம் ...

மேலும்..

தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான ஒரு நாள் சேவை மீண்டும் ஆரம்பமாகிறது!

தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான ஒரு நாள் சேவை  தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த சேவை இம்மாதம் 22 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவிக்கையில், ...

மேலும்..

தபால் மூல வாக்களிப்பு குறித்து வெளியான செய்தியில் உண்மை இல்லை- தேர்தல்கள் ஆணைக்குழு

பொதுத்தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான தினங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இதுவரை உத்தியோகபூர்வமாக நிர்ணயிக்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேலும் தபால் மூல வாக்களிப்புக்கான தினங்கள் தொடர்பாக ஊடகங்களில் வெளியாகி இருக்கும் செய்தியில் உண்மை இல்லையென ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இவ்விடயம் ...

மேலும்..

தீர்க்கப்படாத காணிப் பிணக்குகள்: ஆளுநர் செயலக விசேட குழு கிளிநொச்சியில் விசாரணை

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தீர்க்கப்படாத 55 காணிப் பிணக்குகள் ஆளுநர் செயலக விசாரணைக் குழுவினால் விசாரணைக்கு  உட்படுத்தப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தால் நியமிக்கப்பட்ட இளைப்பாறிய நீதிபதி வசந்தசேனன் தலைமையிலான குறித்த குழு இன்று (வெள்ளிக்கிழமை) கண்டாவளை பிரதேச ...

மேலும்..

பிலிப்பைன்ஸில் இருந்து 223 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து 223 இலங்கையர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்துக்கு சொந்தமான யூ.எல்.1423 என்ற இலக்க விமானத்தில் பிலிபைன்ஸ் மணிலாவில் இருந்து இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இவ்வாறு வருகை தந்த 223 பேரும்,  ...

மேலும்..

முன்னாள் போராளிகள் மீது அக்கறை கொண்டுள்ளதாக சுமந்திரன் கூறுவது முற்றிலும் பொய்- சுரேஸ்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மீது அக்கறை கொண்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்துக்கள் அனைத்தும் பொய்யானவை என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், ...

மேலும்..

பொதுத்தேர்தல்: சஜித் அணியின் வேட்பாளர்கள் மூவர் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் போட்டியிடவிருந்த  3 வேட்பாளர்கள் அதிலிருந்து விலகியுள்ளனர். அதாவது ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடவிருந்த வேட்பாளரான நிலூகா ஏக்கநாயக்க போட்டியிடுவதிலிருந்து விலகியுள்ளார். இவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் மற்றும் பொதுச் ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஜனாதிபதிக்குக் கடிதம்

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினரால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா மற்றும் ...

மேலும்..

பிரதமர் மஹிந்தவை மெய்சிலிர்க்க வைத்த முதியவர்

பொலன்னறுவை- மெதிரிகிரியவைச் சேர்ந்த 86 வயது முதியவர் ஒருவர் நோயுற்றிருக்கும் நிலையிலும் கொரோனா நிதியத்துக்கு 5,000 ரூபாயை வழங்கி,  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை மெய்சிலிர்க்க வைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கைகளுக்கு என எழுதப்பட்ட கடிதமொன்று அலரி மாளிகைக்கு கிடைத்த ...

மேலும்..

குத்தகை வழங்கல் கம்பனிகள் குறித்த நாடாளுமன்றச் சட்டம் திருத்தப்பட வேண்டும்- ஜே.வி.பி.

குத்தகை வழங்கல் கம்பனிகள் தொடர்பான நாடாளுமன்றச் சட்டம் திருத்தியமைக்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குறித்த கம்பனிகளுக்கு அதிகூடிய அதிகாரங்களை தற்போதுள்ள சட்டம் வழங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வாகன குத்தகை வழங்கல் மாபியா தொடர்பாக ...

மேலும்..

மக்களின் குறைகளை தீர்க்க ஒம்புட்ஸ்மன் நியமனம்

பொதுமக்களின் முறைப்பாடுகள் குறித்து விசாரணை மேற்கொண்டு, உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்காக ஜனாதிபதி செயலணிக்கு ஒம்புட்ஸ்மன் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த பதவிக்கு ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்க, ஒம்புட்ஸ்மனாக நியமிக்கப்பட்டுள்ளார். பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கு உரிய முறையில் தீர்வுகள் வழங்கப்படுவதில்லை என தொடர்ந்து பலரினால் ...

மேலும்..

விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் கண்டெடுப்பு

மட்டக்களப்பு- கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி,  குளத்துமடு பகுதியில் விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும்  சில ஆயுதங்கள், இன்று (வெள்ளிக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளர். வாழைச்சேனை கடதாசி ஆலை புலனாய்வு பிரிவினருக்கு இவ்விடயம் தொடர்பாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து குறித்த ...

மேலும்..

தனியார் கல்வி நிலையங்களை நடத்துவதற்கான சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகள் அறிவிப்பு

தனியார் கல்வி நிலையங்களை எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் கொரோனா தடுப்பு சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி நடத்துவதற்கு மத்திய சுகாதார அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பின்வரும் நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ...

மேலும்..