பிரதான செய்திகள்

மன்னாரை குறிவைக்கும் ஆஸ்திரேலிய நிறுவனம்! சாள்ஸ் நிர்மலநாதன் காட்டம்

'மன்னாரில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று மணல் அகழ்வில் ஈடுபடுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக' வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். மன்னார் தமிழரசு கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு ...

மேலும்..

கிளிநொச்சி மகாவித்தியாலய அதிபரின் மணிவிழா நிகழ்வு சிறப்பாக முன்னெடுப்பு!

கிளிநொச்சி மாவட்ட பிரபல பாடசாலையான கிளிநொச்சி மகாவித்தியாலய முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கத்தின் மணிவிழா நிகழ்வு வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வு காலை 9 மணியளவில் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் வைத்தியர் குகராஜா தலைமையில் இடம்பெற்றது. கிளிநொச்சி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாட்டினை ...

மேலும்..

60 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் சிக்கியது

கனடாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலனில் இருந்து ஒரு தொகை குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 25 ஆம் திகதி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட இந்தக் கொள்கலன் மீது சந்தேகத்தின் பேரில் சுங்க ...

மேலும்..

யாழில் நூற்றாண்டு பழைமையான மரம் முறிந்து விழுந்தது!

யாழ் நகரில் நூற்றாண்டு கால பழமையான மரமொன்று சீரற்ற காலநிலை காரணமாக இன்று(16) முறிந்து விழுந்தது. யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் ஆரம்ப பாடசாலைக்கு முன்பாக வீதியோரமாக இருந்த மலைவேம்பு மரமே இவ்வாறு முறிந்து விழுந்துள்ளது. பாடசாலை முன்னால் இருந்த நிலையில் மரம் வீதிக்கு குறுக்காக ...

மேலும்..

பொதுமக்களிற்கு நஷ்டஈட்டை வழங்குவதற்கான போதிய பணம் ராஜபக்சாக்களிடம் உள்ளது – சுமந்திரன்

நீதிமன்றம் நஷ்டஈட்டை வழங்குமாறு உத்தரவிட்டால் 22 மில்லியன் மக்களிற்கும் நஷ்டஈட்டை வழங்குவதற்கான பணம் ராஜபக்சாக்களிடம் உள்ளது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் இந்த பணத்தை மீட்க்கும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்கவேண்டும் எனவும் ...

மேலும்..

பலமான பொருளாதார ஆண்டாக 2024 ஐ மாற்றுவதே எதிர்பார்ப்பு! நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க கருத்து

2024 ஆம் ஆண்டினை பொருளாதார ரீதியில் வலுவான ஆண்டாக மாற்றிக்கொள்ள, 1.8 வீத பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதே அரசாங்கத்தின் அடிப்படை நோக்கமாகும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். அதேபோல், இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள், ...

மேலும்..

கைகள், கால் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

வவுனியா, தரணிக்குளம், குறிசுட்ட குளம் பகுதியிலிருந்து செவ்வாய்க்கிழமை மாலை பெண் ஒருவரின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். தரணிக்குளம் குறிசுட்ட குளத்தின் நீரேந்து பகுதியில் நீரில் மிதந்த நிலையில் அழுகிய நிலையில் காணப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பாக ...

மேலும்..

பொருள்கள் – சேவைகள் ஒப்பந்தத்தை இந்தியாவுடன் மேற்கொள்ள நவடிக்கை! வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ

ஏற்றுமதித்துறையை மேம்படுத்துவதற்காக சிறு தொழில் முயற்சியாளர்களும் ஏற்றுமதித் துறையில் ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அத்துடன் இந்தியா போன்ற நாடுகளுடன் தற்போது முன்னெடுக்கப்படும் பொருள்கள் தொடர்பான வர்த்தக ஒப்பந்தங்களை பொருள்கள் மற்றும் சேவைகள் தொடர்பான ஒப்பந்தங்களாக மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் ...

மேலும்..

நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு மக்களிடமிருந்து அழுத்தமாம்! நீதியமைச்சர் விஜயதாஸ கோருகிறார்

சட்டமியற்றி நாடாளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்க முடியாது. 225 உறுப்பினர்கள் நாட்டு மக்களுக்கும், எதிர்கால தலைமுறையினருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும். ஆனால் தற்போது அவ்வாறான தன்மை ஏதும் கிடையாது. ஆகவே நாடாளுமன்றத்தின் கௌரவத்தைப் பாதுகாக்க கடுமையான தீர்மானங்கள் எடுக்க வேண்டும் என நீதி, ...

மேலும்..

தன்னியக்க பயணச்சீட்டு பரிசோதனை இயந்திரங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொருத்தப்பட்டன!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தன்னியக்க பயணச்சீட்டு பரிசோதனை இயந்திரங்கள் மற்றும் பயணப்பொதி சோதனை இயந்திரங்கள் என்பன நிறுவப்பட்டுள்ளன. தன்னியக்க பயணச்சீட்டு பரிசோதனை இயந்திரங்களை நிறுவும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலைய புறப்படும் முனையத்தில் நடைபெற்றது. கட்டுநாயக்க விமான ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதல் முழுமையான நிதி வைப்பிலிடப்பட்டதும் நீதிமன்ற கண்காணிப்புடன் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு! நீதியமைச்சர் விஜயதாஸ கூறுகிறார்

உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய மைத்திரிபால சிறிசேன, பூஜித் ஜயசுந்தர, நிலந்த ஜயவர்தன, ஹேமசிறி பெர்னாண்டோ,சிசிர மென்டிஸ் ஆகியோர் இழப்பீட்டுக்கான  அலுவலகத்தின் வைப்பு கணக்கில் 3 கோடியே 68 லட்சத்து 25 ஆயிரம் ரூபா வைப்பிட்டுள்ளனர். முழுமையான நிதி வைப்பிலிடப்பட்டதும் நீதிமன்றத்தின் கண்காணிப்புடன் ...

மேலும்..

நிலந்த ஜயவர்தன பதவியில் இருக்கையிலே சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்படுமா? காவிந்த ஜயவர்தன நீதியமைச்சரிடம் கேள்வி

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன பொலிஸ் சேவையில் உயர் பதவியில் இருக்கும் போது சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்படுமா? பாதிக்கப்பட்டோருக்கான நீதி  தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளது ...

மேலும்..

பிரமிட் திட்டத்தில் முதலீடு செய்தாரெனக் கூறப்படும் பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்பு!

பிரமிட் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்தார் எனக் கூறப்படும் பிரத்தியோக வகுப்பு ஆசிரியர் ஒருவரின் சடலம் செவ்வாய்க்கிழமை  பொல்கொட நீர்த்தேக்கத்தில் மிதப்பதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பாணந்துறை கெசல்வத்தை பகுதியைச் சேர்ந்த சேர்ந்த 24 வயதுடைய நிபுன் நவோத் பெர்னாண்டோ ...

மேலும்..

கொங்கிறீட் தூண் சரிந்து விழுந்ததில் ஆறு மாணவர்கள் காயம்- ஒருவர் உயிழப்பு!

வெல்லம்பிட்டிய – வேரகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் இன்று (புதன்கிழமை) பாடசாலை நீர்க்குழாய் பொருத்தப்பட்டுள்ள கொங்கிறீட் தூண் சரிந்து விழுந்ததில் ஆறு மாணவர்கள் காயமடைந்துள்ளதோடு ஒரு மாணவன் உயிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பாடசாலையில் ஆறு அடி உயரத்தில் இருந்த கொங்கிறீட் தட்டின் ஒரு ...

மேலும்..

வரவு செலவு திட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கண்டனம்

வரவுசெலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரம் குறித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்; கண்டணம் வெளியிட்டுள்ளனர். திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினரால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளனர். சர்வதேச விசாரணையே ...

மேலும்..