பிரதான செய்திகள்

பொது சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் பல்லபெத்தே நந்தரதன தேரர் கௌரவ பிரதமரின் ஆலோசகராக பதவி வகிக்கவில்லை.

கெக்கிராவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதார பிசோதகர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் பல்லபெத்தே நந்தரதன தேரர் கௌரவ பிரதமரின் ஆலோசகராக பதவி வகிப்பதாக  வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும். நந்தரதன தேரர் தற்போது கௌரவ பிரதமரின் ஆலோசகராகவோ அல்லது ...

மேலும்..

இன்று வௌியாகியுள்ள கொரோனா பாதிப்பு நிலவரம்…

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 136 மரணங்கள் நேற்று (13) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 11,431 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 136 மரணங்களுடன், ...

மேலும்..

கப்ராலை கைது செய்து மத்திய வங்கி ஆளுநராக நியமிப்பதை தடுத்து கட்டளை பிறப்பிக்குமாறு மனு…

மத்திய வங்கி ஆளுராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் மாகாண ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ஆராய முன்னாள் ...

மேலும்..

கொவிட்-19 தொற்றை முற்றாக இல்லாதொழிக்க வேண்டி மிரிசவெட்டியவில் இடம்பெற்ற விசேட ஒரு வார பிரித் பாராயண நிகழ்வு.

கொவிட்-19 தொற்றை முற்றாக இல்லாதொழிக்க வேண்டியும், அனைத்து உலக மக்கள் மற்றும் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்திற்காகவும் பிரார்த்தித்து வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரம் மிரிசவெட்டிய விகாரையில் நடைபெற்ற விசேட ஒரு வார பிரித் பாராயண நிகழ்வு நேற்று (13) நிறைவடைந்தது. அட்டமஸ்தானாதிபதி அதிவணக்கத்திற்குரிய ...

மேலும்..

கூட்டத்தொடர் ஆரம்ப நாளிலேயே இலங்கைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் மனித உரிமை ஆணையாளர் கருத்து!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48வது கூட்டத்தொடர் இன்று  ஜெனீவாவில் ஆரம்பமாகிய இந்நிலையில் இலங்கை குறித்து முதல் நாளிலேயே கடும் அதிர்ச்சி வெளியிடப்பட்டுள்ளது இலங்கையில் கடந்த மாதம் 30ஆம் திகதி அமல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் மற்றும் அதனை அடுத்து இடம்பெறும் இராணுவத் ...

மேலும்..

மத்திய வங்கி ஆளுநராக ஜனாதிபதியால் அஜித் நிவாட் கப்ரால் நியமனம்.

எதிர்வரும் 15ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றின் மூலம் உறுதி செய்துள்ளது. 15ம் திகதி அஜித் நிவாட் கப்ரால் ...

மேலும்..

நாட்டில் மீண்டும் அதிகரிக்க கொரோனா மரணங்கள், 11,000ஐ தாண்டியது!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் 157 பேர் நேற்று உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதில்  70 ஆண்களும், 87 பெண்களும் அடங்குவதாகவும்  30 வயதிற்கு குறைந்தவர்கள் 4 பேர் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் ...

மேலும்..

கௌரவ பிரதமர் இத்தாலி பயணமானார்.

இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தூதுக் குழுவினர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று (10) அதிகாலை புறப்பட்டனர். இவ்விஜயத்தின்போது கௌரவ பிரதமர் ஜி20 சர்வமத மற்றும் கலாசார மாநாடு – 2021 இன் ...

மேலும்..

பராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற தினேஷ் பிரியந்தவிற்கு வீடொன்றை பெற்றுக்கொடுக்க கௌரவ பிரதமர் நடவடிக்கை.

டோக்கியோவில் நடைபெற்ற 2020 பராலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனையை நிலைநாட்டி இலங்கைக்கு தங்கப் பதக்கம் வென்றுக் கொடுத்த தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு புதிய வீடொன்றை பெற்றுக் கொடுக்குமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நகர அபிவிருத்தி ...

மேலும்..

மஹிந்த இத்தாலி செல்லுமுன் கோட்டா-பஷில் இடையே அவசர சந்திப்பு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று இத்தாலிக்கு செல்ல முன் நேற்று இரவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நீண்ட நேரம் பேச்சு நடத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பில் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்தார். இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட ...

மேலும்..

தொடர்ந்தும் ஊரடங்கு நீடிப்பு!!!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு, எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இன்று(10) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு தொடர்பான செயலணி கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி தனிமைப்படுத்தல் ...

மேலும்..

பராலிம்பிக்கில் சாதனை படைத்த வீரர்கள் கௌரவ பிரதமருடன் சந்திப்பு…

டோக்கியோவில் நடைபெற்ற பராலிம்பிக் 2020-இல் ஈட்டி எறிதல் போட்டியினூடாக புதிய உலக சாதனையை நிலைநாட்டி தாய்நாட்டை தங்கத்தால் அலங்கரித்த தினேஷ் பிரியந்த ஹேரத் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற சமித துலான் கொடிதுவக்கு ஆகியோர் இன்று (08) கௌரவ பிரதமர் மஹிந்த ...

மேலும்..

கருப்பு பணத்தை சுத்தம் செய்வதில் அரசாங்கம் முனைப்புடன் செயல்படுவதாக சஜித் குற்றச்சாட்டு.

அரசாங்கம் சில பணக்கார குபேரர்களுக்கும்,மோசடி செய்பவர்களுக்கும் சலுகை அளிப்பதன் மூலம்  முதலாளித்துவத்திற்கு வழி வகுக்கிறது. அரசாங்கத்தின் நிதி திருத்தச் சட்டம் மூலம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள அறிக்கை. நாட்டின் தற்போதைய நிதி நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, கறுப்பு ...

மேலும்..

இலங்கை ரூபாயின் பெறுமதியில் தீடீர் அதிகரிப்பு…

சர்வதேச நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதியில் இன்று திடீரென ஏற்றம் காணப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்டிருந்த நாணயமாற்று வீதங்களுக்கு அமைய கடும் வீழ்ச்சியை  சந்தித்திருந்த இலங்கை ரூபாயின் பெறுமதி, இன்று திடீர் அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் இன்று ...

மேலும்..

கொரோனா ஒழிப்பு தொழில்நுட்ப குழுவிலிருந்து மற்றுமொருவர் விலகல்…

கொரோனா ஒழிப்பு தொழில்நுட்ப குழுவில் இருந்து மற்றுமொரு விசேட வைத்திய நிபுணர் இராஜினாமா செய்துள்ளார். நிருவிந்தன வைத்தியர் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் அசோக் குணரத்னவே இவ்வாறு இராஜினாமா செய்துள்ளார். சுமார் ஒன்றரை வருடகாலமாக குறித்த தொழில்நுட்ப குழுவிலிருந்து கொரோனா ஒழிப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க ...

மேலும்..