பிரதான செய்திகள்

தெற்கு அதிவேக வீதியில் விபத்து ; ரஷ்ய பிரஜை பலி

தெற்கு அதிவேக வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (05) இரவு இடம்பெற்ற விபத்தில் 42 வயதான ரஷ்ய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த பஸ்  தெற்கு அதிவேக வீதியில் பின்னதுவ மாற்றுப்பாதைக்கு அருகில் 110.6 ஆம் ...

மேலும்..

வாகரையில் மினி சூறாவளி : 6 மீன்பிடி படகுகள், 3 படகு இயந்திரங்கள் சேதம்

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (5) இரவு வீசிய மினி சூறாவளியால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் தூக்கி வீசப்பட்டதையடுத்து, 6 படகுகள், 3 எஞ்ஜின்கள் சேதமடைந்துள்ளதாக வாகரை பிரதேச செயலாளர் க.அருணன் தெரிவித்தார். வாகரை காயங்கேணி கடற்கரையில் மீனவர்கள் ...

மேலும்..

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஜல்லிக்கட்டை ஆரம்பித்து வைத்தார் செந்தில் தொண்டமான்!

தமிழ் மக்களின் பாரம்பரியத்தையும் வீரத்தையும் பறைசாற்றும் ஜல்லிக்கட்டு இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானின் முயற்சியில் இலங்கையில் நடைபெற்றது. இன்று சனிக்கிழமை (06) திருகோணமலை சம்பூரில்  ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. தமிழருடைய பாரம்பரிய ...

மேலும்..

வாள் மற்றும் போதைப்பொருள்களுடன் புதுக்குடியிருப்பில் இளைஞன் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட மாணிக்கபுரம் பகுதியில் வாள் மற்றும் போதை பொருள்களுடன் சந்தேக நபர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். வெள்ளிக்கிழமை மாலை குறித்த நபரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்த வேளை அவரிடம் இருந்து இரண்டு வாள்கள் மற்றும் கஞ்சா, ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கதலைவிக்கு விளக்கமறியல்

வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெள்ளிக்கிழமை வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்ததுடன், நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற வன்னிமாவட்டங்களிற்கான ஒருங்கிணைப்புகுழுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். இதனையடுத்து, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ...

மேலும்..

வலி. வடக்கில் 6,371 ஏக்கர் காணி உயர் பாதுகாப்பு வலயமாக பிரசுரித்த வர்த்தமானி அறிவிப்பை நீக்குக! ஜனாதிபதியிடம் சி.வி.கே. கோரிக்கை

யாழ்ப்பாணம் வலி.வடக்கில் 6 ஆயிரத்து 371 ஏக்கர் காணியை உயர் பாதுகாப்பு வலயமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பை நீக்குமாறு வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போதே அவ்வாறு ...

மேலும்..

நோவா ஸ்கொட்டியாவுக்கான இலங்கை தூதுவராக பேராசிரியர் விமல் ரன்கடுவ!

நோவா ஸ்கொட்டியா, ஹலிஃபாக்ஸுக்கான இலங்கையின் கௌரவ தூதுவராக பேராசிரியர் விமல் ரன்கடுவ நியமிக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் விமல் ரன்கடுவ நோவா ஸ்கொட்டியா மாகாணத்துக்கான இலங்கையின் கௌரவ தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளமைக்கான நியமனக்கடிதம் கனடாவுக்கான இலங்கை பதில் உயர்ஸ்தானிகர் அன்ஸுல் பானு ஜானினால் வியாழக்கிழமை விமல் ரன்கடுவவிடம் ...

மேலும்..

ஜனாதிபதி ரணில் இம்முறையாவது எமது கோரிக்கையை கருத்திற்கொள்ளவேண்டும் கலாநிதி ஆறு.திருமுருகன் உருக்கம்

  ஜனாதிபதி இம்முறையாவது எமது கோரிக்கையை மனிதாபிமான ரீதியில் கருத்திற் கொள்ள வேண்டும் என இந்து மாமன்றத்தின் உப தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் வேண்டுகோள் விடுத்து ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளவை வருமாறு - கடந்த ஆண்டு தைப்பொங்கல் தினத்தில் நல்லை ...

மேலும்..

சுயாதீன தரப்பினர்களில் பெரும்பாலானோர் பொதுஜன பெரமுனவுடன் இணைவார்கள்! ரோஹித நம்பிக்கை

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும், மக்களால் ஏற்றுக் கொள்ளும் நபரை  ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவோம். நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுபவர்களில் பெரும்பாலானோர் பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைவார்கள் என  ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இடம்பெற்ற பேச்சின் பின்னர் ...

மேலும்..

வெலிகமவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சப் இன்பெக்டர் குடும்பத்துக்கு நிதியுதவி!

வெலிகமவில் இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது சுட்டுக்கொல்லப்பட்ட கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் கடமையாற்றிய சப் இன்ஸ்பெக்டர் உபுல் சமிந்த குமாரவுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் 2.5 மில்லியன் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, பொதுமக்கள்  பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸால் 1.7 ...

மேலும்..

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வித்யலங்காரவை கைதுசெய்ய பிடியாணை!

நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை  அனுப்பியும் நீதிமன்றில் ஆஜராகாத ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி வித்யலங்காரவை உடனடியாகக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா  பிடியாணை பிறப்பித்துள்ளார். நிதிக்குற்றம் தொடர்பாக பிரதிவாதிக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்ட ...

மேலும்..

யாழ்ப்பாணத்தை ஆட்டிப்படைக்கும் போதைவஸ்து; நாளைய தலைமுறை திட்டமிட்டு சீரழிக்கப்படுகின்றதா?

த. சுபேசன் கலாசாரத்திற்கு பெயர் போன யாழ்ப்பாணம் இன்று பல்வேறு விதமான கலாசார சீரழிவுகளுக்குள்ளும் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பதனை எம் கண்ணூடாக காண முடிகிறது. வடக்கு மாகாணம் என்றாலே எல்லோருக்கும் நினைவில் வருவது பண்பாடும்-பாரம்பரியங்களும் மாத்திரமே.அந்தளவிற்கு கட்டுக்கோப்புடன் கலாசார விழுமியங்களை பின்பற்றிய தமிழர் தேசம் ...

மேலும்..

அன்று யுத்தத்தால் பறிபோன மனித உயிர்கள் இன்று வீதி விபத்துக்களால் பறிக்கப்படுகின்றன.

த. சுபேசன் இலங்கையைப் பொறுத்தவரை கடந்த மூன்று தசாப்த காலத்திற்கும் மேலாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக பெறுமதியான பல இலட்சம் மனித உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.ஆனால் தற்போது யுத்தம் மௌனித்து விட்ட போதிலும் ஏதோவொரு வகையில் மனித உயிர்கள் காவுகொள்ளப்பட்ட வண்ணமே ...

மேலும்..

சீமெந்து பக்கெற் விலை அதிகரிப்பு!

வற் வரி அதிகரிப்பால் சீமெந்து  ஒரு பக்கெற்றின்  விலை  150  ரூhபாவிலிருந்து  350 ரூபாவாக அதிகரித்துள்ளதாக  உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த விலை அதிகரிப்பின் மூலம் சில சீமெந்து நிறுவனங்களில் 50 கிலோ எடையுள்ள   மூடையின் விலை 2,300 ரூபாவாகவும், மேலும் ...

மேலும்..

கன்னியாஸ்திரிகள் மடத்தில் மட்டக்களப்பில் திருட்டு!  சந்தேகநபர் கைது

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியந்தீவு சென் ஜோசப் கன்னியாஸ்திரிகள் மடத்தில் உள்ள நான்கு கன்னியாஸ்திரிகளின் விடுதிகளில் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நான்கு விடுதிகளில் இருந்து நான்கு கையடக்கத் தொலைபேசிகள் ஏ.ரி.எம் அட்டை, அமெரிக்க டொலர் மற்றும் இந்திய ரூபாக்கள், இலங்கை ...

மேலும்..