இலங்கை செய்திகள்

முகக்கவசம் அணியாத 1,214 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 1,214 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கொழும்பு உட்பட மேல் மாகாணத்திலேயே இவ்வாறு முகக் கவசம் அணியாமல்  பயணித்தவர்களே  கைது செய்யப்பட்டு  14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் பயணிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் ...

மேலும்..

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய உற்சவம் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய நடைபெறுகிறது – மகேசன்

யாழ்ப்பாணம் – நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய உற்சவம் மட்டுப்படுத்தப்பட்ட பக்கதர்களோடு, சுகாதார விதிமுறைகளுக்கு அமைய நடைபெற்று வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டபின் யாழ் மாவட்ட ...

மேலும்..

மக்கள் என்னை நிராகரித்தால் அரசியலில் இருந்து ஓய்வுப்பெறுவேன்- குணசீலன்

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் மக்கள் என்னை நிராகரிப்பார்களாயின் நான் அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வுப்பெறுவேன் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ...

மேலும்..

பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பியவருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 2037 ஆக உயர்வு

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளாரென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2037 ஆக அதிகரித்துள்ளது. பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பிய ஒருவருக்கே கொரோனா தொற்றுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதேநேரம் நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ...

மேலும்..

இலங்கையில் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டமைக்கான காரணம் குறித்து ஜனாதிபதி விளக்கம்

இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த இரண்டு மாதங்களாக சமூகத்தில் பரவுவது பூச்சியமாக காணப்பட்டமையினாலேயே ஊரடங்கை தளர்த்துவதற்கு தீர்மானித்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையிலும் ஏற்பட்டதையடுத்து, கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வந்தது. மே ...

மேலும்..

முற்போக்கு கூட்டணியை மலையக மக்கள் இம்முறையும் பலப்படுத்த வேண்டும் – இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் பாராளுமன்றத்துக்கு 9 உறுப்பினர்கள் தெரிவாகும்வகையில் வாக்களித்து, முற்போக்கு கூட்டணியை மலையக மக்கள் இம்முறையும் பலப்படுத்த வேண்டும் என்று கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான முன்னாள் அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கொத்மலையில் 27.06.2020 அன்று ...

மேலும்..

போலி வேட்பாளர்களின் பிரச்சாரங்களை மக்கள் நம்பக்கூடாது – ராமேஷ்வரன் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) " இலங்கைத்  தொழிலாளர் காங்கிரசுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் ஏனைய தமிழக்கட்சிகளுக்குமிடையில் எவ்வித தொடர்பும் கிடையாது. காங்கிரஸ் ஐந்து வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தியுள்ளது. எனவே, போலி வேட்பாளர்களின் பிரச்சாரங்களை மக்கள் நம்பக்கூடாது." - என்று இலங்கைத் ...

மேலும்..

இராணுவ மயமாக்கல் மூலம் தமிழர்களை முடக்க நினைக்கிறார் கோத்தபாய- எச்சரிக்கிறார் சிறீதரன்

இராணுவ மயமாக்கல் மூலம் ஜனாதிபதி கோத்தபாய தமிழர்களை முடக்க நினைக்கிறார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ் நகரில் இன்று இளைஞர்களுடனான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு ...

மேலும்..

வடக்கு, கிழக்கு தமிழர்களின் பூர்வீகம் என்பதை எவராலும் மறுக்க முடியாது -வாசுதேவ நாணயக்கார

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதை எவராலும் மறுக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் அல்ல என தொல்பொருள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் எல்லாவல ...

மேலும்..

வட- கிழக்கில் 20 ஆசனங்களை கூட்டமைப்பு கைப்பற்றுவதற்கு உதவுவோம்- ஜனநாயகப் போராளிகள் கட்சி

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு- கிழக்கில் 20 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளும் வகையில் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோமென ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் பி.கோணேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ...

மேலும்..

சிறுபான்மை மக்களின் ஆதரவு பொதுஜன பெரமுனவுக்கு அதிகரித்துள்ளது- ராஜபக்ஷ

சிறுபான்மை மக்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை  ஆதரிப்பது அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துள்ளதாக அக்கட்சியின் மாவட்ட வேட்பாளர் வைத்தியக் கலாநிதி திலக ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அம்பாறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த மக்கள் சந்திப்பில் திலக ...

மேலும்..

காணாமலாக்கப்பட்டவர்கள் உயிருடன் இல்லையென்றால் அவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டனர்? – சுரேஷ் கேள்வி

காணாமலாக்கப்பட்டவர்கள் இறந்துபோயிருப்பார்கள் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூறியிருக்கும் கருத்து உண்மையானால் அவர்கள் எவ்வாறு? யாரால்? எதற்காக கொல்லப்பட்டார்கள் என்பதை அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – கட்டப்பிராயில் உள்ள அவருடைய ...

மேலும்..

யுத்தத்திற்கு பின்னர் வெளிநாட்டு சக்திகள் தலையிட்டன – பிரதமர் மஹிந்த

2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப்போரில் இலங்கை வெற்றிபெற்றதன் பின்னர் தான் தோல்வியடைந்த 2015 ஜனாதிபதித் தேர்தலில்  கூட வெளிநாட்டு சக்திகள் தலையிட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சதிகளை தோற்கடிப்பது என்ற தலைப்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ...

மேலும்..

எம்.சி.சி. தொடர்பான மீளாய்வுக் குழுவின் இறுதி அறிக்கை மக்கள் பார்வைக்காக

நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் நிறுவனத்துடனான உடன்படிக்கை குறித்த மீளாய்வுக் குழுவின் அறிக்கை பொதுமக்கள் பார்வைக்காக இணையத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது. அதற்கமைய கீழ்வரும் இணைத்தள முகவரிக்குள் பிரவேசித்து குறித்த அறிக்கையை பார்வையிட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.president.gov.lk/ta/ அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் நிறுவனத்தின் மானியம் குறித்து ...

மேலும்..

தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குள் நுழைய மாட்டேன்: சுமந்திரன்

தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குள் நுழைய மாட்டேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழ் வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தளவான வாக்குகளை பெற்றுக்கொண்டால், ...

மேலும்..