இலங்கை செய்திகள்

யாழ்.திருநெல்வே பகுதியில் விலைக்கழிவில் பெற்றோல்?

ஒரு லீற்றர் பெற்றோல் ரூ.07 விலைக்கழிவிலும், ஒரு லீற்றர் டீசல் ரூ. 03 விலைக்கழிவிலும் தாம் விற்பனை செய்வதாக பெற்றோல் நிலைய உரிமையாளர் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சீன நிறுவனமான சினோபெக் ...

மேலும்..

காசாவில் தொடரும் மனித அவலம்…! இலங்கையின் இறுதி போரை பிரதிபலிக்கும் சம்பவங்கள்..T

காசாவில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் இலங்கையின் இறுதிபோரின் ஆரம்ப தருணங்களை நினைவுபடுத்துகின்றன என பத்திரிகையாளரும் ஆய்வாளரும் எழுத்தாளருமான மார்க்சோல்டர் தெரிவித்துள்ளார். இலங்கையின் சமாதான முயற்சிகளில் நோர்வேயின் பங்களிப்பு என்ற நூலை எழுதிய மார்க்சோல்டர் தனது எக்ஸ் தளத்தின் பதிவு ஒன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேற்படி ...

மேலும்..

மிருசுவில் படுகொலை : சுனில் ரத்நாயக்கவுக்கு வழங்கிய மன்னிப்புக்கு எதிரான மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி!

2000ஆம் ஆண்டு டிசம்பரில் இடம்பெற்ற மிருசுவில் படுகொலைச் சம்பவத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்கவுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பை எதிர்த்து மாற்றுக் கொள்கைக்கான நிலையம்  மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் தாக்கல் செய்த மனுவைத் தொடர உயர் நீதிமன்றம் நேற்று (12) ...

மேலும்..

கல்குடா – ஓட்டமாவடிக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மக்கள் குடியிருப்பு பிரதேசத்திற்குள் புகுந்த யானையின் அட்டகாசத்தால் சொத்துக்களுக்கு சேதமேற்பட்டுள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். வியாழக்கிழமை (12) நள்ளிரவு ஓட்டமாவடி ஆற்றின் ஊடாக பிரதேசத்திற்குள் புகுந்த யானை ஓட்டமாவடி 02 ஜீ.எஸ்.ஓ.வீதியில் உள்ள இரண்டு வீட்டின் ...

மேலும்..

வவுனியாவில் காணாமல்போன மகனைத் தேடிய தந்தை மரணம்

வவுனியாவில் யுத்தகாலத்தில் காணாமல்போன தனது மகனைத் தேடிய தந்தை ஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா, மகாறம்பைக்குளம் ஶ்ரீராமபுரம் பகுதியை சேர்ந்த முத்தையா ஆறுமுகம் (வயது 65) என்ற தந்தையே வியாழக்கிழமை (12) மரணமடைந்துள்ளார். இவரது மகனான ஆறுமுகம் சிவகுமார் கடந்த 2007 ஆம் ஆண்டு ...

மேலும்..

புலிகளின் தங்கம் இருப்பதாகத் தெரிவித்து வவுனியாவில் பல இடங்களில் அகழ்வு

வவுனியா, புதியகோவில்குளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தங்கம் என சந்தேகிக்கப்படும் பல இடங்களில் வியாழக்கிழமை (12) வவுனியா நீதவான் வசீம் அஹமட் மேற்பார்வையில் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தனியார் காணியில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் புதைக்கப்பட்டதாக ...

மேலும்..

சம்மாந்துறையில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு

கிணறு ஒன்றில்  இருந்து  மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகளை  சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  அம்மன் கோவில்  காணி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த கிணறு ஒன்றை வியாழக்கிழமை (12)  துப்பரவு செய்த போது இவ்வாறு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன் ...

மேலும்..

மழையினால் இடிந்து வீழ்ந்த தலதா மாளிகையின் சுவர்

மழையினால் இடிந்து வீழ்ந்த தலதா மாளிகையின் சுவர் தற்போது பெய்து வரும் கடும் மழையினால் கண்டி ஸ்ரீP தலதா மாளிகையின் இடதுபுறத்தில் அமைந்துள்ள பழைய அரசு மாளிகைக்கு முன்னால் உள்ள அகழிக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பக்கவாட்டு சுவரின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மண் ...

மேலும்..

அரசாங்கத்தினுடைய முகம் மாற்றம் அடைந்துள்ளது!

“அரசாங்கத்தினுடைய முகம் தற்போது மாற்றமடைந்துள்ளது” என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சீ.வீ.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி ரெவல்யனுக்கும் தமிழ்க் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு யாழிலுள்ள விருந்தினர் விடுதியில் நேற்று இரவு (12) இடம்பெற்றது.| இச் சந்திப்பில் பிரித்தானிய ...

மேலும்..

சிறைச்சாலைகளுக்கான செலவு குறித்து இராஜாங்க அமைச்சர் ஜயரத்ன கருத்து!

திறைசேரி மீது சிறைச்சாலைகளுக்கான செலவுகள் ஏற்படுத்தும் சுமை குறித்த கலந்துரையாடலில் சிறை அமைப்புமுறையை  மீளமைப்பதற்கு இராஜாங்க அமைச்சர் ஆதரவு தெரிவிக்கிறார். அவருடைய கருத்துக்கு வலுச்சேர்ப்பதற்கு அவர் இரண்டு கூற்றுகளை முன்வைக்கிறார்: 1. (அ) தற்போதுள்ள சிறைக் கைதிகளின் எண்ணிக்கை 28,468. (ஆ) இவர்களில் ...

மேலும்..

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கியதும் நாடாளுமன்றை கலைக்கவேண்டும் சுனில்ஹந்துநெத்தி ஆணித்தரம்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை நீக்கிய உடன் நாடாளுமன்றத்தைக் கலைக்கவேண்டும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான  தீர்மானம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால் அன்றைய தினமே நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான தீர்மானத்தையும் சமர்ப்பிக்கவேண்டும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. அரசியல் தேவைகளுக்காக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ...

மேலும்..

உலகமுடிவு மலைதொடருக்கு செல்கின்ற வீதிக்குத் தடை!

நுவரெலியா மாவட்டத்தில் வெலிமடையில்  ரேந்தபொல - அம்பேவல வீதியின் அண்மித்த பகுதியில் புதன்கிழமை மண்சரிவு ஏற்பட்டுள்ளதால்  உலக முடிவு மலைத் தொடரை நோக்கி செல்லும் வீதி மூடப்பட்டுள்ளது. மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் வீதி பாரியளவில் சேதமடைந்துள்ளதாகவும், போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும், மண் சரிவு ...

மேலும்..

வடக்கின் தற்போதைய நிலைமை குறித்து மிகவும் மகிழ்ச்சி தருகிறது! பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி கருத்து

வடமாகாணத்தின் தற்போதைய நிலைமை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி பெலிண்டா ரவேலியன் தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரித்தானிய அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் வடமாகாண மக்களின் வாழ்க்கை முறையில் முன்னேற்றம் ஏற்பட்டு ...

மேலும்..

அமெரிக்க துணைச் செயலர் – சுமந்திரன் எம்.பி சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அண்மைக்கால போக்கு சம்பந்தமாக தாம் கரிசனை கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணைச் செயலர், அஃப்ரீன் அக்தருக்கும் இலங்கை தமிழரசுக்கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கும் ...

மேலும்..

கொழும்பில் உதயமாகும் தமிழர் கல்வி மேம்பாட்டுக் கழகம்

தமிழ் சமுதாயத்தின் கல்வி அறிவை மேம்படுத்தும் வகையில்  தமிழர் கல்வி மேம்பாட்டு கழகம்  எனும் அமைப்பு  நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனினால் கொழும்பில்  அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இந்நிகழ்வின் போது  தமிழர் கல்வி மேம்பாட்டு கழகத்தின் போசகராக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனும், தலைவராக ...

மேலும்..