இலங்கை செய்திகள்

வெறுப்பை நீக்கி புதிய வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அனுப்ப வேண்டும் – வஜிர

வாக்காளர்களின் உள்ளத்தில் உள்ள வெறுப்பை நீக்கியே வாக்கெடுப்பு நிலையங்களுக்கு அவர்களை அனுப்ப வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். வெறுப்பு, கோபம், பொறாமை இல்லாத வாக்காளர் ஒருவர் வாக்குச் சாவடிக்குச் செல்லும் போது ஒரு நல்ல நாட்டை ...

மேலும்..

பாதாளக் குழுக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது!

நாட்டில் பாதாளக் குழுவினரின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஆனால் இதுவரை பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படவில்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” இலங்கை வரலாற்றில் இவ்வாறு பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்படாதமை ...

மேலும்..

மொரட்டுவையில் வீதிக்கு வந்த முதலையால் பரபரப்பு!

மொரட்டுவ, லுனாவ பகுதியில் சுமார் 8 அடி நீளமான முதலையொன்று இன்று அப்பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கும், பொலிஸாருக்கும், தெரியப்படுத்திய போதும் இது வரை எந்த நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் அதிருப்தி  தெரிவித்துள்ளனர்.

மேலும்..

ஐக்கிய அரபு இராச்சியத்துடன் கூட்டு பொருளாதார சபை – இலங்கை முன்மொழிவு

ஐக்கிய அரபு இராச்சியத்துடன் கூட்டு பொருளாதார சபையை அமைப்பதற்கு இலங்கை முன்மொழிந்துள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான அமைச்சர் அஹமட் பின் அலி சயேக் ஆகியோருக்கிடையில் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் ...

மேலும்..

கோட்டாவால் தான் நாடு சீரழிந்துள்ளது ஆஷூ மாரசிங்க சாட்டை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஸபக்சவினால் தான் நாடு சீரழிந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசு மாரசிங்க குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகோத்தாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதியின் காலத்தில் ...

மேலும்..

புலி அமைப்பின் வாலை மட்டுமே எம்மால் அழிக்க முடிந்தது : சரத் வீரசேகர கவலை!

தோட்டாக்களினால் பெற்றுக் கொள்ள முடியாதுபோன தமிழீழத்தை, 13 இன் ஊடாக பெற்றுக் கொள்வதே சிலரின் இலக்காகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் ...

மேலும்..

பல்கலைக்கழக விடுதிகளை சோதனைக்குட்படுத்த முடிவு! அமைச்சர் ராகவன் அதிரடி

'பல்கலைக்கழக விடுதிகளை இரவு வேளைகளில் சோதனைக்கு உட்படுத்த தீர்மானித்துள்ளதாக' உயர்கல்வி இராஜாங்க அமைச்சர், சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக விடுதிகளில் இடம்பெறும் பகிடிவதைகளைத்  தடுக்கும் விதமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் - விடுதிகளில் நள்ளிரவு 12 ...

மேலும்..

தேசிய கீதம் தமிழில் பாடாததால் கவலை! அமைச்சர் டக்ளஸூக்கு வந்த மொழிப்பற்று

''யாழில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் தமிழில் தேசிய கீதம் பாடப்படாதமை கவலையளிக்கின்றது' என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தேசிய தொழிற் தகைமை சான்றிதழ் (என்.வி.கியு) கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை யாழ். சாவகச்சேரி பொன்விழா ...

மேலும்..

நடிகர் ஜக்சனின் பூதவுடலுக்கு பெருமளவான மக்கள் அஞ்சலி!

மறைந்த நடிகர் சகலகலா சக்திய ஜாக்சன் ஆண்டனியின் பூதவுடல் கடவத்த பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை பொரளையில் உள்ள ஜெயரத்ன மலர்சாலையில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த கலைஞர்கள், அறிஞர்கள், அரசியல்வாதிகள், மகாசங்கத்தினர் உள்ளிட்ட மதத் ...

மேலும்..

ஓட்டோ உரிமையாளர்கள் யாழில் கவனவீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணத்தில் புதன்கிழமை காலை ஓட்டோ உரிமையாளர்கள் கவனவீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ். பண்ணையில் அமைந்துள்ள தூர இடங்களுக்கான பஸ் நிலையத்திலிருந்து, ஆரம்பமாகிய பேரணி யாழ். நகரில் முடிவடைந்தது. அண்மைய நாள்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புதிய செயலி மூலம் ஓட்டோ சேவையை மக்கள் பயன்படுத்தி வருவதன் ...

மேலும்..

10 வயது சிறுமி விபத்தில் பலி!

அனுராதபுரம் தலாவ பகுதியில் எரிபொருள் ஏற்றிவந்த பௌஸர் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சிறுமி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் தலாவ ஆரம்ப பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் 10 வயதான சிறுமியே உயிரிழந்துள்ளார். கொழும்பு சப்புகஸ்கந்த பிரதேசத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த ...

மேலும்..

இலங்கைக்குப் பெருமை சேர்த்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை பெற்றுக் கொடுத்த வீரர்கள் நாடு திரும்பிய நிலையில், அவர்களுக்கு விமானநிலையத்தில் பெரும் உற்சாக வரவேற்பு  அளிக்கப்பட்டது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு தங்கப்பதக்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக அலி சாஹிர் மௌலானா!

கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக அலி சாஹிர் மௌலானா புதன்கிழமை தெரிவு செய்யப்பட்டார். இந்தத் தீர்ப்பு அரசியல் கட்சிகளுக்கு ஒரு முக்கியமான முன்னுதாரணமாக அமைவதாக அலி ...

மேலும்..

வனிந்து ஹசரங்கவிற்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைவு!

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்கவிற்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வனிந்து ஹசரங்க   தனது உடலில் ஏற்பட்ட உபாதை காரணமாக அண்மையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில்,' தனக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை வெற்றியடைந்துள்ளதாகவும், நாட்டுக்காக உத்வேகத்துடன் ...

மேலும்..

தரம் குறைந்த மருந்து பொருள்கள் கொள்வனவு சஜித் பிரேமதாஸ பாரிய குற்றச்சாட்டு

தரம் குறைந்த மருந்துப் பொருள்கள் கொள்வனவு செய்யப்படுவது தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாரிய குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார். மருந்துப் பொருள்கள் தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை விடுத்தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் - 'இத்தருணத்தில் தற்போதைய அரசாங்கமும், சுகாதார அமைச்சரும், ...

மேலும்..