இலங்கை செய்திகள்

அப்துல் கலாமின் 92ஆவது பிறந்த தின நிகழ்வு

இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 92ஆவது பிறந்த தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழிற்கான இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் அப்துல் கலாமின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி ...

மேலும்..

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்கள் கைது..T

யாழ்ப்பாணம் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய கடற்றொழிலாளர் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் (14.10.2023) கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த 13 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 3 ...

மேலும்..

யாழ்.போதனா பாதுகாப்பு ஊழியர்கள் நபர் ஒருவர் மீது கோரத் தாக்குதல்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் நபர் ஒருவருடன் முரண்பட்டு அவரை மிக மோசமாகத் தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இரண்டு பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இணைந்து நபரை கீழே தள்ளி விழுத்தி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் முறையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

மேலும்..

ஐ.தே.க. எந்த பதவியிலும் மாற்றம் செய்யக் கூடாது! கட்சி மத்திய குழுவில் தீர்மானம்

ஐக்கிய தேசிய கட்சியைப் படிப்படியாக முன்னுக்கு கொண்டுவருவதற்காகக் கட்சியின் தற்போதைய தலைவர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவந்துள்ளனர். இந்த வேலைத்திட்டங்களைத் தொடர்ந்து அந்த தலைவர்கள் ஊடாகக் கொண்டுசெல்வதற்கான பலம் இருக்கிறது. அதனால் கட்சியில் தற்போது பதவி நிலைகளில் இருப்பவர்களை எந்த மாற்றமும் செய்யக்கூடாது ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படாதது ஏன்?  பேராசிரியர் செல்வகுமாரன் தெரிவிப்பு

அரசாங்கம் மற்றும் அரச கட்டமைப்புக்களிடமிருந்து நம்பகத்தன்மைவாய்ந்த உண்மையான தகவல்கள் வெளிவராதபோது போலியானதும், தவறானதுமான தகவல்கள் உருவாவதாக சுட்டிக்காட்டியுள்ள பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினரும், கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட முன்னாள் பீடாதிபதியுமான பேராசிரியர் என்.செல்வகுமாரன், உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான முன்னைய விசாரணை ...

மேலும்..

ராஜினாமா செய்வதே டக்ளஸூக்கு நல்லது! சாணக்கியன் ஆலோசனை

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் ஏதாவது ஒரு நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய அமைச்சை இராஜினாமா செய்துவிட்டு வெறுமனே ஒரு நாடாளுமன்ற உறுப்பினாக இருப்பதே சிறந்தது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு ஊடக ...

மேலும்..

போலிச் செய்திகள், தவறான தகவல்களை கையாள்வதற்கு பிரத்தியேகசட்டம் அவசியம் ஆணையாளர் பிரதிபா மஹநாமஹேவா கருத்து

கனேடிய பிரதமரால் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட இனப்படுகொலை குற்றச்சாட்டு, பின்னர் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சாலேயே மறுக்கப்பட்டாலும் அது மிகவேகமாகப் பரவிவிட்டதாக சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹநாமஹேவா, தனியுரிமைசார் தகவல்கள் மற்றும் கருத்துச்சுதந்திரம் என்பன ...

மேலும்..

முதிரை மரக் குற்றிகளை ஏற்றி வந்த பட்டாரக வாகனத்துடன் சாரதி கைது!

மாங்குளத்தில் இருந்து பட்டாரக வாகனம் ஒன்றில் முதிரை குற்றிகளை தேங்காய் பொச்சுக்களால் மறைத்து கடத்த முற்பட்ட வட்டுகோட்டையை சேர்ந்த 28 வயதுடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது மூன்று லட்சம் ...

மேலும்..

மலையகத்தில் எந்தவோர் உதவிகளை வழங்கவும் மலையக அரசியல்வாதிகள் அனுமதிக்கிறார்களல்லர்! சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வேதனை

'நாம் விளையாட்டுத்துறை சார்ந்தோ அல்லது வேறெந்த விடயங்களிலோ உதவிகளை வழங்க மலையக அரசியல்வாதிகள் அனுமதிப்பதில்லை. ஒரு மைதானத்தில் எதைச் செய்வதானாலும், அங்குள்ள அரசியல்வாதிகள் மற்றும் பாடசாலைகளின் கல்விப் பணிப்பாளர்களினது அனுமதி வேண்டும். எனினும், அவர்களின் அனுமதி கிடைக்காது. அனுமதி பெறுவதும் மிகக் ...

மேலும்..

இஸ்ரேல் – ஹமாஸ் போரினால் உலக அமைதிக்கு சீர்குலைவு : ஸ்ரீகாந்தா தெரிவிப்பு

மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையில் இப்போது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் போரினால் உலக அமைதியின் எதிர்காலமே கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் மூத்த சட்டத்தரணியுமான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். என்.ஸ்ரீகாந்தா ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையில் இவ் ...

மேலும்..

விபுலானந்தர் மணி மண்டபம் கல்முனையில் திறந்துவைப்பு!

  கல்முனை இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் மீளப் புனரமைக்கப்பட்ட விபுலானந்தர் மண்டபம் கடந்த புதன்கிழமை காலை அதிபர் திருமதி விஜயசாந்தினி நந்தபால தலைமையில் கோலாகலமாகத் திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வின் விருந்தினர்களாக சிவஸ்ரீ சச்சிதானந்தக் குருக்கள், கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ச.சரவணமுத்து, உதவிக் ...

மேலும்..

டிஜிற்றல் மயமாக்கலுக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு இலங்கையர் அனைவருக்கும் கிடைக்கவேண்டும்!  ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

டிஜிற்றல் மயமாக்கலுக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு இலங்கையர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதற்குரிய அடிப்படை டிஜிற்றல் உட்கட்டமைப்பு வசதிகளை தனியார் துறையின் தனிப்பட்ட முதலீடுகள் மூலம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்பதோடு, தனியார் துறையினருக்கு கிட்டாத வாய்ப்புக்களில் அரசாங்கம் ...

மேலும்..

இலங்கையின் இறுதிபோரின் ஆரம்ப தருணங்களை காசாவில் நடக்கும் சம்பவங்கள் நினைவுபடுத்தல்! மார்க் சோல்டர் கருத்து

காசாவில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் இலங்கையின் இறுதிபோரின் ஆரம்ப தருணங்களை நினைவுபடுத்துகின்றன என பத்திரிகையாளரும் ஆய்வாளரும் எழுத்தாளருமான மார்க் சோல்டர் தெரிவித்துள்ளார். இலங்கையின் சமாதான முயற்சிகளில் நோர்வேயின் பங்களிப்பு குறித்த  என்ற நூலை எழுதிய மார்க்சோல்டர் தனது ருவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார். காசாவில் ...

மேலும்..

பொகவந்தலாவையில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை ஒன்று மீட்பு!

பொகவந்தலாவை பிரதேச தோட்டக் கம்பனிக்கு சொந்தமான லெதண்டி தோட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை சிறுத்தை ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுமார் நான்கு அடி நீளம் கொண்ட சிறுத்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குறித்த தோட்டத்துக்கு தற்செயலாக வந்த நபர் ஒருவர்  சிறுத்தையின் சடலத்தைக் கண்டு ஹற்றன் பொலிஸாருக்கும் ...

மேலும்..

இரட்டை நிலைப்பாடு கொண்டவர்களால் தமிழ் மக்களுக்குத் தீர்வு கிடைக்காதாம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ரங்கன் கூறுகிறார்

இரட்டை நிலைப்பாடு கொண்டவர்களால் தமிழ் மக்களுக்கு எவ்விதமான தீர்வுகளையும் பெற்றுக்கொடுக்க முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் - தற்போது ...

மேலும்..