உலகச் செய்திகள்

வீடு தேடி வந்த அதிஷ்டத்தை போலி என நினைத்தவருக்கு இறுதியில் அடித்த அதிஷ்டம்

மெரிக்காவில் அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் வெற்றிபெற்ற நபர், அதனை போலி என நினைத்துள்ளார். ஆனால் அதிஷ்ட இலாப நிறுவனமே தகவலை தெரிவித்தவுடன் தான் அவருக்கு உண்மையான விடயமே புரிந்துள்ளது. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்த 59 வயது நபர் ஒருவர், அண்மையில் அதிஷ்ட இலாப டிக்கெட்டை ...

மேலும்..

பிரான்ஸ் நாளை முடங்கும் அபாயம்

பிரான்சில் நிலவும் எரிபொருள் விநியோக நெருக்கடிக்கு அப்பால் நாளை பொது வேலைநிறுத்தம் ஒன்றுக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பை விடுத்துள்ளன. இதனால் நாளை நாடளாவிய ரீதியில் இயல்புவாழ்க்கை பாதிக்கப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரான்சில் உள்ள 5 மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளிலும் இன்று முதல் முழு வேலைநிறுத்தம் இடம்பெற்று வருகிறது. பொது வேலைநிறுத்தம்   பிரான்சில் மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் இடம்பெறும் ...

மேலும்..

பாலியல் வன்முறைகளை இராணுவ யுக்தியாக பயன்படுத்தும் ரஷ்யா – ஐ.நா பிரதிநிதி

ரஷ்யா – உக்ரைன் போரின் ஒரு பகுதியாக உக்ரைனில் பாலியல் வன்முறைகள் நடப்பதற்கான தெளிவான அறிகுறிகள் தெரிகின்றன என ஐ.நா பிரதிநிதி ஒருவர் ரஷ்யா மீது குற்றம்சாட்டியுள்ளார். இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 24 -ஆம் திகதி ரஷ்யா, உக்ரைன் மீது போர் ...

மேலும்..

எல்லையில் பதற்றம் – பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய படை

சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானம் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் பஞ்சாப்பில் உள்ள குர்தாஸ்பூர் பிரிவு எல்லைக்குள் வெள்ளிக்கிழமையன்று ஆளில்லா விமானம் ஒன்று அத்துமீறி நுழைந்தது. இதைஅவதானித்த ரோந்தில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்புப் படையினர் அதனை சுட்டு வீழ்த்தினர். இந்நிலையில், நேற்றிரவு 9.15 மணியளவில் பஞ்சாப்பில் உள்ள ...

மேலும்..

ரஷ்ய இராணுவ தளத்தில் பயங்கரவாத தாக்குதல் – 11 பேர் பலி ….

உக்ரைனுக்கு அருகிலுள்ள ரஸ்ய இராணுவ தளத்தில் சோவியத் ரஸ்ய ஆதரவாளர்கள் இருவர் பயிற்சியின் போது மற்ற வீரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் எல்லையை ஒட்டிய தென்மேற்கு ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் இந்த துப்பாக்கிச்சூடு ...

மேலும்..

அப்துல் கலாமின் பிறந்த தினத்தை ஒட்டி காரைநகர் கடற்கரையில் மணல் சிற்பம்

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அமரர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் மணல் சிற்பம் காரைநகரிலுள்ள கசூரினா கடற்கரையில் உருவாக்கப்பட்டது. அப்துல் கலாமின் 91ஆவது பிறந்த தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிலையில் வேலணையைச் சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர் சுப்பிரமணியம் சுகுமாரால் அப்துல் கலாமின் மணல் ...

மேலும்..

அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட 200 சடலங்கள்: பாகிஸ்தானில் நிகழ்ந்த திகிலூட்டும் சம்பவம்: வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்

பாகிஸ்தானின் முல்தான் நகரில் உள்ள மருத்துவமனையின் கூரையில் குறைந்தது 200 அழுகிய சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முல்தானில் உள்ள நிஷ்தார் மருத்துவமனையின் பிணவறையின் கூரையில் இருந்து நூற்றுக்கணக்கான மனித உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. பின்னர் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க அரசாங்கம் ...

மேலும்..

கனேடிய மக்களுக்கு காத்திருக்கும் பேரிடி!

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கனடாவில் பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளதென ரோயல் வங்கியின் பொருளாதார நிபுணர்களான நாதன் ஜான்சன் மற்றும் கிளாரி ஃபேன் ஆகியோர் கணித்துள்ளனர். மத்திய வங்கி வட்டி விகிதங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நாதன் ...

மேலும்..

உச்சக்கட்ட போர்ப் பதற்றம் – மூன்றாம் உலக போர் நிச்சயம்; உலக நாடுகளை அலறவிட்டுள்ள ரஷ்யா!

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையின் உச்சக்கட்டமாக, ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு உக்ரைனின் மிக முக்கிய நான்கு நகரங்களை ரஷ்யாவுடன்  இணைத்து கொண்டதாக அதிபர் புடின் அறிவித்திருந்தார். இவ்வாறான நிலையில், உக்ரைனை நேட்டோவில் இணைத்துக்கொண்டால், மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் ...

மேலும்..

புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவில் கிடைக்கவுள்ள மிகப்பெரும் வாய்ப்பு! வெற்றிடமாகவுள்ள 1.2 மில்லியன் பணியிடங்கள்

பிரித்தானியாவில் வரலாறு காணாத அளவில் 1.2 மில்லியன் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ள நிலையில், அவற்றை புலம்பெயர்ந்தோரைக் கொண்டு நிரப்ப அமைச்சர் ஒருவர் அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதேவேளை, பணி மற்றும் ஓய்வூதியங்களுக்கான செயலரான சோலி ஸ்மித் (Chloe Smith) திறன்மிகு வெளிநாட்டுப்பணியாளர்களைக் கொண்டு ...

மேலும்..

நியூசிலாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 450 திமிங்கலங்கள்

நியூசிலாந்து கடற்பகுதியில் 450 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடற்கரைப் பகுதிகளில் திமிங்கலங்கள் கரை ஒதுங்கி உயிரிழக்கும் சம்பவங்கள் உலகம் முழுவதும் அவ்வப்போது நடைபெற்ற வண்ணம் இருக்கிறது. தமிழகத்தில் கூட பல பகுதிகளில் திமிங்கலங்கள் பல முறை கரை ...

மேலும்..

கனடாவில் பிரபலமான இலங்கைத்தமிழர் மறைவு

 இலங்கைத்தமிழர் மறைவு கனடாவில் பிரபலமாக இருந்த இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரொறன்ரோவில் வசிக்கும் ஸ்ரீ குகன் ஸ்ரீஸ்கந்தராஜா என்ற இலங்கைத்தமிழரே உயிரிழந்தவராவார். ரொறன்ரோவில் உள்ள தமிழ் சமூகத்தினரின் குடியேற்றம், தொழிலாளர் நலன், இளைஞர்களை ஊக்குவிப்பது போன்ற வழிகாட்டுதல் பணிகளில் இவர் ஈடுபட்டு வந்தார். ஹரிஅனந்தசங்கரிஇரங்கல்   குறித்த இலங்கைத்தமிழர் உயிரிழந்தமை ...

மேலும்..

போர் வியூகத்தை மாற்றிய ரஷ்யா – ஐரோப்பிய நாடுகளுக்கு புதிய தலையிடி

உக்ரைன் மீதான தனது போரால் ஐரோப்பிய நாடுகள் பெரும் சக்திவள நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், உக்ரைனுக்கு உதவிவழங்கும் நாடுகள் அதற்கு இனிமேல் மின்சாரத்தையும் வழங்கவேண்டிய இக்கட்டான நிலைமையை உருவாக்கும் வகையில் ரஷ்யாவின் போர் வியூகம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த சனியன்று இடம்பெற்ற கிரைமியாவின் கெர்சபாலம் மீதான ...

மேலும்..

மகாராணியின் மாளிகையில் ஏற்பட்ட மாற்றம்

மகாராணியின் மாளிகையில் ஏற்பட்ட மாற்றம் மகாராணி இரண்டாம் எலிசபெத் தங்கியிருந்த பால்மோரல் மாளிகையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதை ராஜகுடும்ப ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர். பிரித்தானிய மன்னர் சார்லஸ், அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாண ஆளுநரான Linda Dessau என்பவருடன் பால்மோரல் மாளிகையில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. ராஜகுடும்பத்தினர் எதைச் ...

மேலும்..

பிரித்தானிய அரண்மனை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு – உறுதியான அறிவிப்பை வெளியிடாத ஹரி-மேகன்!

பிரித்தானிய மன்னராக மூன்றாம் சார்லஸ் முடிசூட்டும் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிசூட்டு விழாவானது பாரம்பரிய முறைப்படி முன்னெடுக்கப்படும் எனவும் பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் வெளியிட்டுள்ளது. இந்த விழாவில் ராணியாராக கமிலாவும் முடிசூட உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னால், 8 ...

மேலும்..