January 29, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் ; வெகு விரைவில் நமது ஆட்சி வரும் – அநுரகுமார திஸாநாயக்க

தொழில் வல்லுநர்கள் உள்ளிட் அனைத்து தரப்பினரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் இலங்கையில் வெகுவிரைவில் திசைக்காட்டி ஆட்சி அமைக்கும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்புவோம். உணர்ச்சியற்ற தலைவர்கள் ...

மேலும்..

தனுஷ்க குணதிலக்க குறித்து விசாரணை நடத்துமாறு சட்டமா அதிபர் ஆலோசனை

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்திய நிலையில், பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் நடத்தை குறித்து விசாரணை நடத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சருக்கு சட்டமா அதிபர் சஞ்சய் ...

மேலும்..

கடவுச்சீட்டுகளை வழங்க மேலும் 50 பிராந்திய மையங்கள்

கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக 50 பிராந்திய மையங்களை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார் தற்போது வவுனியா, குருநாகல், மாத்தறை மற்றும் கண்டி ஆகிய 4 பிராந்திய அலுவலகங்களில் கொழும்பில் உள்ள தலைமை அலுவலகம் தவிர கடவுச்சீட்டு வழங்கும் ...

மேலும்..

காரைதீவு பிரதேசத்திற்கு கௌரவ. சிவநேசதுரை சந்திரகாந்தன் விஜயம் செய்தார்..

இன்று அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேசத்திற்கு கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட குழு அபிவிருத்தி தலைவருமான கௌரவ. சிவநேசதுரை சந்திரகாந்தன் விஜயம் செய்தார். அவர் காரைதீவு கண்ணகி அம்மன் கோயிலில் இறைவழிபாட்டில் ஈடுபட்டு பின்னர் கண்ணகி அம்மன் ஒன்று ...

மேலும்..

மலையக மக்களின் 200 வருட வாழ்வியலை பிரதிபலித்து ஹட்டனில் பாரிய ஊர்வலம்

இந்திய வம்சாவளி மக்களான மலையக தமிழ் மக்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்து இவ்வருடத்துடன் 200 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இதனை நினைவு கூர்ந்து ஹட்டன் மல்லியப்பூ சந்தியிலிருந்து மக்களின் வாழ்வியலையும் கலை கலாசார அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் 1,000 க்கும் மேற்பட்டோர் ...

மேலும்..

புல்மோட்டையில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல்! – இருவர் பலி!

திருகோணமலை - புல்மோட்டை பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். காணி தகராறு காரணமாக மோதல் ஏற்பட்டதாகவும் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த இருவரும் 41 மற்றும் 45 வயதுடையவர்கள் என ...

மேலும்..

உள்ளூராட்சி தேர்தல் குறித்து வௌியான விசேட அறிக்கை!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான விசேட அறிவிப்பை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் கூடிய வர்த்தமானி, அச்சிடுவதற்காக அரசாங்க அச்சகத்திற்கு இதுவரை அனுப்பி வைக்கப்படவில்லை ...

மேலும்..

ஜனக ரத்நாயக்கவை நீக்க குற்றப்பத்திரிக்கை தயார்

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்கம் செய்வதுடன் தொடர்புடைய குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று (29) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தற்போது ...

மேலும்..

தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவது குறித்து அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

புதிய மின் கட்டண திருத்தத்திற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கினால், அன்றைய தினம் முதல் இலங்கை மின்சார சபை தொடர்ந்து மின்சாரத்தை வழங்கும் என மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று (29) இடம்பெற்ற விசேட ...

மேலும்..

பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று மதியம் 1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கிய நிலையில், அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியே ஓடிவந்தனர். இந்த நிலநடுக்கத்தில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பதற்றம் நிலவியது. இந்த நிலையில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ...

மேலும்..

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் சிரமதானம்

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்புரைக்கு அமைய"வீட்டினையும் நாட்டினையும் சுத்தமாக்குவோம்" எனும் கருப்பொருளில் கல்முனை சமுர்த்தி வங்கி வலயங்களில் இன்று (29.01.2023) மாபெரும் சிரமதான நிகழ்வுகள் இடம்பெற்றது. இந்நிகழ்வானது  கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத்தலி அவர்களின் ...

மேலும்..

அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 16வது வருடாந்த மாநாடும் பொதுக் கூட்டமும்

அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 16வது வருடாந்த மாநாடும்  பொதுக் கூட்டமும் ஞாயிற்றுக்கிழமை (29) தலைவர் யூ.எல்எம். பைஸர் தலைமையில் மாளிகைக்காடு வாவா றோயலி வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி ...

மேலும்..

சுதந்திர தினத்தையொட்டி விசேட கண்காட்சி – அனுமதி இலவசம்

75 ஆவது சுதந்திர விழாவையொட்டி, தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம், மத்திய கலாசார நிதியம், தொல்பொருள் திணைக்களம் மற்றும் அருங்காட்சிய திணைக்களம் ஆகியவை இணைந்து கண்காட்சியொன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளன. எதிர்வரும் பெப்ரவரி 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் தேசிய அருங்காட்சியகத்தில் குறித்த ...

மேலும்..

இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட 100 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிக்கப்படும்..

யாழ்ப்பாணத்தில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பொதுமக்களின் காணிகளை பெப்ரவரி 8 ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்கான சமாதானம்,நல்லிணக்கம் தொடர்பான விழிப்பூட்டும் கலந்துரையாடல்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்கான சமாதானம்,நல்லிணக்கம் தொடர்பான விழிப்பூட்டும் கலந்துரையாடல் நிகழ்வு சமாதானமும்,சமூகப்பணியும் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கல்முனை எஸ்.எல்.ஆர் தனியார் விடுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (29)காலை முதல் மாலை வரையும் இடம்பெற்றது. இக்கலந்துரையாடல் நிகழ்வில்  தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ்துறை மற்றும்,ஊடகத்துறைக்கான பொறுப்பான முதனிலை ...

மேலும்..

சீனாவில் இருந்து 10,000 தண்டவாளங்கள் இறக்குமதியாகிறது!

ரயில் தடம்புரள்வுகளை குறைக்கவும், தொடரூந்து சேவைகளை மேம்படுத்தவும், 45 அடி நீளமுள்ள 10,000 ரயில் தண்டவாளங்களை சீனாவில் இருந்து இரண்டு மாதங்களுக்குள் இறக்குமதிசெய்ய எதிர்பார்த்துள்ளதாக ரயில் திணைக்களத்தின் பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக தொடருந்து தடம்புரண்ட சம்பவங்களை கருத்திற்கொண்டு இந்த ...

மேலும்..

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு கொலைமிரட்டல் – விசாரணை நடத்த நீதிமன்ற உத்தரவு

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கொலைமிரட்டலுடன் தொடர்புடைய தொலைபேசி இலக்கம் குறித்து விசாரணை நடத்த பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளன தொலைபேசி அழைப்புகள் மூலம் அச்சுறுத்தலுக்குள்ளான ஆணைக்குழு உறுப்பினர்கள் எஸ்.பி. திவாரட்ன மற்றும் கே.பி.பி. பத்திரன ஆகியோர் முன்வைத்த முறைப்பாடுகளுக்கு அமைய ...

மேலும்..

வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கான அடிப்படை ஏற்பாடுகள் தயார் நிலையில்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான அடிப்படைப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்க அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அச்சிடுதல் தொடர்பான ஆய்வுகள் உள்ளிட்ட அடிப்படைப் பணிகளை முடிக்க எதிர்பார்த்துள்ளதாக அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே ...

மேலும்..

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நானுஓயா தோட்டத்திற்கு அண்மித்த பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் காணப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பத்தனை மவுண்ட்வேர்ணன் தோட்டம் ...

மேலும்..

சிறுவர்கள் மத்தியில் தொழுநோய் அதிகரிப்பு

இலங்கையில் தொழுநோயாளிகளில் 10 வீதமானோர் சிறுவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் வருடாந்தம் சுமார் 2,000 தொழுநோயாளிகள் பதிவாகுவதாக அவர் தெரிவித்தார். இன்று (29) அனுசரிக்கப்படும் உலக தொழுநோய் தினத்தை ...

மேலும்..

யாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் வன்முறையாளர்கள் தொடர்பில் தகவல் வழங்கினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரட்ண அறிவித்துள்ளார். மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்துத் துன்புறுத்திய ...

மேலும்..

மலேசிய மற்றும் இலங்கை ரோட்டரிக் கழக அங்கத்தவர்கள் யாழில் சந்திப்பு.

மலேசிய மற்றும் இலங்கை ரோட்டரிக் கழக அங்கத்தவர்களுக்கிடையிலான சந்திப்பொன்று கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் ஜெற்வின் ஹோட்டலில் இடம்பெற்றிருந்தது. இதன்போது யாழ்ப்பாணம்,கிளிநொச்சி நகர் மற்றும் சுன்னாகம் பாரம்பரிய ரோட்டரிக் கழக அங்கத்தவர்கள் மலேசிய ரோட்டரிக் கழக அங்கத்தவர்களை சந்தித்து தமது எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாக ...

மேலும்..

போரில் பட்ட காயத்தின் வலியை விட அதிக வலியை சமூகம் இன்று எமக்கு கொடுக்கிறது-போராளிகள் நலன்புரிச்சங்க தலைவர்.

சாவகச்சேரி விடுதலைப் போராட்டத்தில் நாம் காயப்பட்ட போது உணர்ந்த வலியை விட அதிகமான வலியை இன்று சமூகம் எமக்கு கொடுக்கிறது என போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் யாழ் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். அண்மையில் "இனத்திற்காக உழைத்தவரை இன்னலின்றி வாழ வைப்போம்" எனும் தொனிப்பொருளில் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 29 ஜனவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும்.தேவையான பணம் கையில் இருப்பதால், உற்சாகமாகச் சமாளித்துவிடுவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூர்களில் இருக்கும் கோயில்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகப் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பதில் ...

மேலும்..