May 16, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயத்துக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி சென்றது!  குண்டுத் தாக்குதலில் உயிர்நீத்தவர்களுக்கும் அஞ்சலி

திங்கட்கிழமை யாழ். நகரை வந்தடைந்த முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி நேற்று காலை காங்கேசன்துறை வீதி வழியாக மருதனார்மடத்தைச் சென்றடைந்து அங்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, தொடர்ந்து மானிப்பாய் சென்பீற்றர்ஸ் தேவாலயத்தை சென்றடைந்தது. அங்கு சென்பீற்றர்ஸ் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல், முள்ளிவாய்க்கால் நினைவு தொடர்பாக ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி நேற்று  மருதனார்மடத்தில் அஞ்சலி!  கஞ்சியும் மக்களுக்கு வழங்கிவைப்பு

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் நாளை மறுதினம் 18 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் நிலையில் நேற்று காலை 8 மணிக்கு நினைவு ஊர்தி மருதனார்மடத்தைச் சென்றடைந்தது. அங்கு வலி.தெற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் தி.பிரகாஷ் தலைமையில் நினைவு ஊர்தியில் உள்ள தீபத்துக்கு மலரஞ்சலி செலுத்தி ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் கஞ்சி திருமலை சல்லி கிராமத்தில்!

முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி பரிமாறும் நிகழ்வு திருக்கோணமலை சல்லி கிராமத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இதன்போது பொதுமக்கள் உட்பட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் நிகழ்வில் கலந்து கொண்டு  தங்கள் துக்கத்தை பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.

மேலும்..

முள்ளிவாய்க்கால் படுகொலையாளிகளை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும்! வாஜிலிங்கம் வலியுறுத்தல்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என தமிழ் த் தேசியக் கட்சி செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தை முன்னிட்டு இன்று, அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வை அடுத்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேற்படி அஞ்சலி ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தலுக்கு ஏற்பாடுகளை செய்தால் ஆதரவை வழங்கத் தயார்!  சஜித் பிரேமதாஸ பகிரங்கம்

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்தால் அதற்கு ஆதரவை வழங்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் சர்வகட்சி ஒன்றியத்தின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை, அரசாங்கம் தன் நிகழ்ச்சி ...

மேலும்..

போதைப்பொருள்கள் பாவனை ஒழிப்பு பெண்களுக்கான அறிவூட்டல் நிகழ்வு!

சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்ததாக 'போதைவஸ்து பாவனை ஒழிப்பு' எனும் தொனிப்பொருளில் சாய்ந்தமருது பெண்களுக்கான அறிவூட்டல் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைவாக, சாய்ந்தமருது சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவின்  சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபரின் ஏற்பாட்டில் ...

மேலும்..

விசேட தேவையுடையவர்களுக்கு தொழிலுக்கு ஊக்கப்படுத்த பயிற்சி! 

மனித வலு வேலை வாய்ப்பு திணைக்களம்  மற்றும் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் அனுசரணையுடன் சாய்ந்தமருது பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்  ஏ.தால்சுறுன், திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எம்.கஸ்ஸாலி ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற விசேட தேவையுடையவர்களைத் தொழிலுக்கு ஊக்கப்படுத்துவதன் மூலம் ...

மேலும்..

புதிதாகப் பதிக்கப்பட்டுவருகின்ற கல் தொடர்பில் யாழ்.மாநகர ஆணையாளர் கவனத்தில் கொள்க!  பொதுமக்கள் கோரிக்கை

யாழ்ப்பாணம் கல்வியங்காடு செங்குந்தா பொது சந்தை புதிய கடைத்தொகுதி ஆடியபாதம் வீதி வெளிப்புற பக்கமாக புதிகாக பதிக்கப்பட்டுவரும் நடைபாதை அழகுபடுத்தல் கல், ஆடியபாதம் வீதியை பயன்படுத்தும் பொதுமக்களுக்கும் வாகன சாரதிகளுக்கும் இடையூறாக அமைக்கப்பட்டுவருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டி கருத்துத் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாண மாநகர ...

மேலும்..

நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகமாக குஷானி ரோஹணதீர நியமனம் பெற்றார்!

நாடாளுமன்ற செயலாளர் நாயகம் பதவிக்கு தற்போதைய தலைமை அதிகாரியும் நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகமுமான திருமதி குஷானி ரோஹணதீர நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதற்கான நியமனத்தை வழங்கியுள்ளார். அரசமைப்பு சபையின் அங்கீகாரத்துடன் திருமதி குஷானி ரோஹணதீர 2023 மே 23 முதல்  நாடாளுமன்றத்தின் ...

மேலும்..

வடக்கு, கிழக்கில் விடுவிக்கப்படாமல் இருக்கும் மக்களின் காணிகளை கையளிக்க நடவடிக்கை! எடுக்கப்படும் என்கிறார் விஜேதாஸ

வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகளில் 90சதவீதத்துக்கும் அதிகமான காணிகள் அப்பிரதேச மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. பல்வேறு காரணங்களால் விடுவிக்காமல் உள்ள காணிகளை உரியவர்களுக்கு விரைவாக பெற்றுக்கொடுக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமெரிக்க அரச திணைக்களத்தின் ...

மேலும்..

வடக்கு, கிழக்கில் பௌத்தத்துக்கு எதிரானவற்றுக்கு ஆதரவு தெற்கில் பௌத்தபற்றாளர் போல் செயற்படுகின்றார் ஜனாதிபதி!  விமல் வீரவன்ஸ சாட்டை அடி

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறுபான்மை அரசியல் கட்சிகளின் கைபொம்மையாகச் செயற்படுகிறார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதத்துக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கி விட்டு தெற்கில் பௌத்த பற்றாளர் போல் செயற்படுகிறார் என ...

மேலும்..

தெமட்டகொட வேலைத்தளத்துக்குள் பிரவேசித்த மூவர் பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியை அபகரிக்க முயற்சி!   வானை நோக்கி சூடு

ரயில்வே திணைக்களத்துக்குச் சொந்தமான தெமட்டகொட வேலைத்தளத்துக்குள் பிரவேசித்த மூவரை கைதுசெய்யும் வகையில் வானத்தை நோக்கி சுட்ட பின்னர், அவர்களில் இருவரை கைதுசெய்தனர் என ரயில்வே பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். 54 ஏக்கர் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் கஞ்சி குடித்த பொலிஸார் மீது விசாரணைகள்! 

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கடந்த 10.05.2023 அன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றிலில் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இதன்போது ஏ-9 பிரதான வீதியில் பயணிப்பவர்களுக்கு ஏற்பாட்டாளர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் வீதியில் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அனைவரும் அணிதிரள்தல் வேண்டும்!  மாவை சேனாதிராஜா கோரிக்கை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனைவரும் அணிதிரள வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராசா அழைப்பு விடுத்துள்ளார். மே 18  முள்ளிவாய்கால்  நினைவேந்தல் தொடர்பில அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் இதனை தெரிவித்தார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு - இலங்கைக்கு ...

மேலும்..

பொதுமக்களின் சுகாதார மேம்பாட்டை உறுதிப்படுத்த உள்ளூராட்சிமன்றங்களுடன் விசேட கலந்துரையாடல் 

கல்முனை சுகாதார பிராந்தியத்துக்கு உட்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்௧ளுடனான கலந்துரையாடல் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் கல்முனை பிராந்திய சுற்றுச்சூழல் மற்றும் தொழில்வாண்மை சுகாதாரப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எஸ்.எம். பௌசாதினால் இணைப்புச் ...

மேலும்..

பெரும் குற்றச்செயல்களைக் குறைப்பதற்கு மரணதண்டனை நடைமுறையாக வேண்டும்!  திருமலை பள்ளி வாயல்களின் சம்மேளன செயலர் எம்.எம்.மஹ்தி  கருத்து

தற்போது நாட்டில் அதிகரித்து வருகின்ற பெருங் குற்றச்செயல்களை குறைப்பதால் மரண தண்டனையை நடைமுறைப் படுத்துவதே ஒரே தீர்வாக அமையும் என திருகோணமலை மாவட்ட பள்ளி வாயல்களின் சம்மேளன செயலாளரும் கிண்ணியா நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான எம். எம். மஹ்தி தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு ...

மேலும்..

அரசின் நம்பத் தகுந்ததும் நேர்மறையானதுமான முயற்சிகளை என்றும் சந்தேகிக்க விரும்பவில்லை! நாணய நிதிய அதிகாரிகள் சுட்டிக்காட்டு

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாகக் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் சிறப்பான முறையில் பேச்சுகளை முன்னெடுத்துவருவதாகவும், விரிவாக்கப்பட்ட நிதியுதவிச் செயற்திட்டத்தின்கீழான முதலாவது மதிப்பீடு இடம்பெறவுள்ள எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துக்குள் கடன்மறுசீரமைப்புச் செயன்முறையைப் பூர்த்திசெய்யவேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதிய சர்வதேச ...

மேலும்..