தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் எச்சரிக்கை
தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் எச்சரிக்கை
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் பெய்து வரும் கணிசமான மழையால் அத்தனகல்லு ஓயா, மஹா ஓயா, களனி கங்கை மற்றும் களு கங்கை ஆகிய ஆறுகளின் நீர் மட்டம் உயர்வடைந் துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலைமை காரணமாக குக்குலே ஆற்று நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, புளத்சிங்கள பிரதேசத்தில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு தற்போதும் அமுலில் உள்ளதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.பி.சி.சுகிஸ் வர தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை