வேகமாகப் பரவும் கொரோனா! 823 ஆக அதிகரித்தது தொற்று!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகின்றது. இந்தத் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

நேற்று 26 பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்துப் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 797 இலிருந்து 823 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து மேலும் 17 பேர் நேற்று குணமடைந்துள்ளனர். அதற்கமைய குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 232 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுக்குள்ளாகியவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 582 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே மேலும் 134 பேர் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.