சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இனிமேல் நவீன துப்பாக்கிகள்…

உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நவீன துப்பாக்கிகளை வழங்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் பிரகாரம் மில்லி மீற்றர் – 09 ரக கைத்துப்பாக்கிகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை , மகசின் , கொழும்பு தடுப்புக்காவல் , நீர்கொழும்பு , பூஸா மற்றும் அங்குனுகொலபெலஸ்ஸ ஆகிய சிறைச்சாலைகளின் அதிகாரிகள் மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு இந்தத் துப்பாக்கிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு துப்பாக்கிகளைப் பெற்றுக்கொள்ளும் அதிகாரிகளுக்கு விசேட பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.