மண்டூர் 37ஆம்கிராமம் நவகிரி பாடசாலை வளாகத்தில் பொலிஸாரும் படையினரும் இணைந்து தேடுதல்…

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குடு;பட்ட மண்டூர் 37ஆம் கிராமம் நவகிரி பாடசாலை வளாகத்தில் பொலிஸாரும் படையினரும் இணைந்து தேடுதல் மேற்கொண்டனர்.

குறித்த பாடசாலை வளாகம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது முகாமாக செயற்பட்டதனால் அங்கு பொருட்கள் புதைத்துவைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த பாடசாலையில் ஜெசிபி வாகனம் சகிதம் மடு தோண்டப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றத்தில் பெறப்பட்ட கட்டளைக்கு அமைவாக தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,விசேட அதிரடிப்படையினர்,இராணுவத்தினர் பங்குபற்றுதலுடன் வெல்லாவெளி பொலிஸாரின் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மாலை வரையில் அப்பகுதியில் தோண்டப்பட்டு தேடுதல் முன்னெடுக்கப்பட்டபோதிலும் எந்த பொருட்களும் மீட்கப்படாத வகையில் தோண்டும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.