வாழைச்சேனை சுகாதார பிரிவில் இவ்வருடம் 315 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் முதலாம் திகதி வரை 315 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ்; தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் கண்ணகிபுரம், கருணைபுரம், விநாயகபுரம், புதுக்குடியிருப்பு ஆகிய கிராமங்களில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் காணப்படுகின்றனர்.

அந்தவகையில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள வீடுகளில் டெங்கு நுளம்பு குடம்பிகள் காணப்படுகின்ற இடங்களை அடையாளப்படுத்தி மக்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கையும், வீட்டு வளாகம் பரிசோதனை செய்யும் நடவடிக்கையும் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தலைமையில் இடம்பெற்ற பரிசோதனையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஆர்.நிதிராஜ், பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள்;, பிரதேச சபை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது டெங்கு நோய் பரவும் வகையில் நீர் தாங்கி மற்றும் கழிவுகளை வைத்திருந்த ஆறு பேருக்கு எச்சரிக்கை சிவப்பு துண்டு வழங்கப்பட்டதுடன், மூன்று நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டதாகவும், எச்சரிக்கை விடுக்கப்பட்ட நபர்கள் சுத்தம் இல்லாமல் மீண்டும் வைத்திருந்தால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ்; தெரிவித்தார்.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் நவம்பர் முதலாம் திகதி வரை 315 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் முதலாம் திகதி வரை 41 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் என சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ்; மேலும் தெரிவித்தார்.

இதன்போது வீட்டு வளாகத்தினுள் காணப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், நீர் தேங்கி காணப்படும் பொருட்கள், கழிவுப் பொருட்கள் உட்பட்ட பல்வேறு பொருட்கள் அகற்றப்பட்டு வாழைச்சேனை பிரதேச சபை வாகனத்தில் ஏற்றப்பட்டது.

இவற்றினை பிரதேச சபையால் அகற்றாமல் காணப்படுவதனாலே குறித்த பிரதேசங்களில் அதிக டெங்கு தாக்கம் இடம்பெற வாய்ப்பு காணப்படுவதுடன், குறித்த பகுதிகளில் காணப்படும் மதகுகள், வாய்க்கால்கள் குப்பைகள் நிறைந்து தற்போது பெய்த மழை காரணமான நீர்கள் வழிந்தோட முடியாத நிலையில் காணப்படுவதால் டெங்கு தாக்கம் அதிகரிப்பதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

(ந.குகதர்சன் )

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.