லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடர் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி ஆரம்பம்

லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடர் நவம்பர்27முதல் டிசெம்பர் 17ஆம் திகதிவரை நடைபெறும் என்றும், ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் மாத்திரமே நடைபெறுமென இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

தற்போதைய தொற்றுநோய் சூழல்கள் காரணமாக ஆரம்பத்தில் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரு பகுதிகளிலும் தொற்றுநோய் பாதிப்புக்கள் காணப்பட்டிருந்த நிலையில் சுகாதார அமைச்சுடன் பலசுற்றுபேச்சுவார்த்தைகளை நடத்தியபின்னரே இலங்கை கிரிக்கெட் இந்த தீர்மானத்தை வெளியிட்டுள்ளது.

அதன்படி, போட்டிகளின் போது கடைபிடிக்கவேண்டிய கடுமையான சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாகவே இந்த போட்டிகளை நடத்துவதற்கும் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.