திருடிய பொருட்களை தேடிச்சென்ற பொலிஸாரிடம் சிக்கிய போதைப்பொருள்

திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆயிரத்து 50 போதை மாத்திரைகளை  உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் (09) நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் நிலாவெளி ஆத்திமோட்டை பகுதியைச் சேர்ந்த 33 வயது உடையவர் எனவும் தெரியவருகின்றது.

நிலாவெளி பிரதேசத்தில் கடை ஒன்றினை உடைத்து  பொருட்களை திருடியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பெறப்பட்ட தகவலையடுத்து திருடிய பொருட்களை வீடு  ஒன்றினுள் மறைத்து வைத்திருப்பதாக வழங்கப்பட்ட தகவலையடுத்து அந்த பூட்டை சோதனையிட்டபோது வீட்டுக்குள் இருந்து 1050 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டதாகவும் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணை இன்றையதினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
(அப்துல்சலாம் யாசீம்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.