நாட்டில் உடன் அமுலுக்கு வரும் உத்தரவுகளுக்கான அதிகாரம் எந்த சட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது; சபையில் சுமந்திரன் கேள்வி

நாட்டில் உடன் அமுலுக்கு வரும் உத்தரவுகளுக்கான அதிகாரம் எந்த சட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இந்தக் கேள்வியை முன்வைத்துள்ளார்.
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் மற்றும் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து பேருந்து சேவைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் நேற்று நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அத்தோடு, எதிர்வரும் 15ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை இடைநிறுத்தம் தொடரும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்தார்.
இந்த நிலையிலேயே மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க மற்றும் வெளியேற தடை விதித்து இராணுவத்தளபதி உடன் அமுலுக்கு வரும் வகையில் உத்தரவிட்டதற்கான அதிகாரம் எந்த சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது என எம்.ஏ.சுமந்திரன் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.